கீவ்: உக்ரேனை நோக்கி ரஷ்யா மார்ச் 29ல் ஏவுகணைகளைப் பாய்ச்சியது. உக்ரேனின் இவானோ ஃபிரான்கிஃப்ஸ்க், கெமெனல்ன்ட்ஸ்கி ஆகிய மாநிலங்களிலும் டினிப்ரோ நகரிலும் வெடிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதல் காரணமாக உயிர்ச் சேதம், பொருள் சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.