தந்தையருக்கு வேலை நேரத்தின்போது ‘தாய்ப்பால்’ இடைவேளை

பொல்ஸானோ: இத்தாலியின் பொல்ஸானோ மாநிலத்தில் வேலை செய்யும் தந்தையருக்குத் ‘தாய்ப்பால்’ இடைவேளை வழங்கப்படுகிறது.

இந்த இடைவேளையின்போது தங்கள் பிள்ளைகளுக்குத் தேவையானவற்றை தந்தையர் செய்து முடிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

உதாரணத்துக்கு, புதிதாகப் பிறந்த குழந்தையை வீட்டில் இருந்தவாறு மனைவி பார்த்துக்கொள்ளும்போது மற்ற பிள்ளைகளை அவரது கணவர் பள்ளிகளிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம்.

ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இத்தாலியின் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது.

இதுகுறித்து இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியும் போப்பாண்டவர் ஃபிரான்சிசும் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆனால் இத்தாலியின் பொல்ஸானோ மாநிலத்தில் மட்டும் குழந்தை பிறப்பு விகிதம் பல ஆண்டுகளாகச் சீராக இருந்து வருகிறது.

அங்குள்ள பெற்றோருக்குப் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.

பாலர் பள்ளிகளுக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்குத் தேவையான பொருள்கள், மளிகைப் பொருள்கள், சுகாதாரப் பராமரிப்பு, மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம், பள்ளி நடவடிக்கைகள், கோடைக்கால முகாம்கள் ஆகியவை தள்ளுபடி விலையில் வழங்கப்படுகின்றன.

கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்க இத்தாலியத் தம்பதியரை ஊக்குவிக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கையை பொல்ஸானோ மாநிலம் எடுத்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!