பெருஞ்செல்வந்தராக அறிவிக்கப்பட்ட டெய்லர் சுவிஃப்ட்

‘பில்லியனர்’ என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது ஃபோர்ப்ஸ் சஞ்சிகை

நியூயார்க்: புகழ்பெற்ற இசைக் கலைஞர் டெய்லர் சுவிஃப்ட், பெருஞ்செல்வந்தர் என்று ஏப்ரல் 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஃபோர்ப்ஸ் சஞ்சிகை அவரை ‘பில்லியனர்’ என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. 34 வயதாகும் சுவிஃப்டின் சொத்து மதிப்பு 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் (S$ 1.5 பில்லியன்) என்று கூறப்பட்டது.

தமது இசைத்திறமையால் இந்த நிலையை அடைந்த ஒரே இசைக்கலைஞர் டெய்லர் சுவிஃப்ட் என்று ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டது.

‘பில்லியனர்’ தகுதியை அடைந்த மற்ற இசைக்கலைஞர்கள் சிலர் ஆடம்பரப் பொருள் விற்பனை, மதுபான நிறுவனம் போன்ற இதர வழிகளாலும் பணம் சேர்த்தவர்கள் என்று அது சொன்னது.

டெய்லர் சுவிஃப்ட் நடத்திவரும் ‘இராஸ்’ சுற்றுப்பயணம், உலகெங்குமுள்ள அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியதுடன் பல நாடுகளின் பொருளியல் வளர்ச்சிக்கும் உதவியுள்ளது.

நான்கு கிராமி விருதுகளை வென்றுள்ள சுவிஃப்ட், 2023ஆம் ஆண்டின் ஆகச் சிறந்த நபர் என்று டைம்ஸ் சஞ்சிகை அறிவித்தது. தமது கதையை எழுதி, அதன் நாயகியாக விளங்கும் அரிய நபர் என்று டைம்ஸ் அவரைப் பாராட்டியது.

ஏப்ரல் 19ஆம் தேதி அவரது புதிய இசைத் தொகுப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் வேளையில் ஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் தகவல் வெளிவந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!