$142,000யுடன் கடைத்தொகுதியில் விடப்பட்ட பெட்டி: ஆடவரின் வாக்குமூலம் பெற்ற காவல்துறை

‌ஷா ஆலம்: மலேசியாவில் 500,000 ரிங்கிட்டுக்கும் (142,000 வெள்ளி) அதிகமான தொகையைக் கொண்ட பெட்டியைக் கடைத்தொகையில் விட்டுச்சென்ற ஆடவரின் வாக்குமூலத்தை அந்நாட்டுக் காவல்துறையினர் பதிவுசெய்துள்ளனர்.

சனிக்கிழமையன்று (ஏப்ரல் 6) அந்த ஆடவரின் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது. பெட்டாலிங் ஜெயாவில் இருக்கும் டமன்சாரா பகுதியில் உள்ள கடைத்தொகுதியின் வாகன நிறுத்துமிடத்தில் அந்த ஆடவர் பணம் உள்ள பெட்டியை விட்டுச்சென்றது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகின. அதன் மூலம் அடையாளம் தெரிவிக்கப்படாத அவரைக் காவல்துறையினர் பிடித்தனர்.

அப்பெட்டியைப் பாதுகாவல் அதிகாரி ஒருவர் முதலில் கண்டுபிடித்தார். அது தனக்குச் சொந்தம் என்று கூறி முன்வந்திருந்த வேறு நபரும் இந்த ஆடவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்வதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் ஒமார் கான் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இதுகுறித்து விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!