சிலாங்கூரில் காற்றின் தரம் குறைந்தது

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தின் சில பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளது. காற்று மாசடைந்ததை அடுத்து, புகைமூட்டம் காரணமாக சில இடங்களில் கட்டடங்களைத் தெளிவாகப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், அடுத்த சில நாள்களில் மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளதால் வானம் தெளிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 9ஆம் தேதியன்று சிலாங்கூரின் கிள்ளான், பந்திங் ஆகிய நகரங்களில் காற்றின் தரம் மக்களின் உடல்நிலையைப் பாதிக்கக்கூடிய அளவில இருந்ததாக மலேசிய சுற்றுப்புறத் துறை வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.

அண்டை மாநிலமான பாகாங்கில் உள்ள சில வனப்பகுதிகளில் தீ மூண்டதால் சிலாங்கூரில் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடும் வெப்பநிலை காரணமாக வனப்பகுதிகளில் தீ மூண்டிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!