கடும் வெப்பம்; ஆபத்தில் கிழக்காசிய குழந்தைகள்

பேங்காக்: கிழக்காசிய மற்றும் பசிபிக் நாடுகளில் வாழும் 243 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடும் என்று ஐக்கிய நாட்டு அமைப்பு கவலைத் தெரிவித்துள்ளது.

கடுமையான வெப்பத்தால் உடல்நலம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் மரணம் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வரும் மாதங்களில் இவ் வட்டாரங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவு வெப்பநிலை பதிவாகும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

பெரியவர்களை ஒப்பிடுகையில் வெப்பத்தை தாங்கும் சக்தி குழந்தைகளுக்குக் குறைவு, அதனால் பிள்ளைகள் மூச்சுத்திணறல், ஆஸ்துமா, இதயம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படலாம் என்று அக்கறை எழுந்துள்ளது.

குழந்தைகளைக் காக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்கிழக்காசியாவிலும் வெப்பம் கடுமையாக உள்ளது.  தாய்லாந்தில் இதுவரை இரண்டு பேர் வெப்ப தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.

பிலிப்பீன்சிலும் சில நகரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் வீடுகளில் இருந்தே படிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!