ஈரான்-இஸ்ரேல் பதற்றம்: விமானப் பயணக் கட்டணம் கூடலாம்

புதுடெல்லி: இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு விமானப் பயணம் மேற்கொள்வதற்கான நேரம் ஒரு மணி நேரம் வரை அதிகரிக்கக்கூடும். மேலும், விமானப் பயணக் கட்டணமும் உயரலாம்.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதால் ஏர் இந்தியா, விஸ்தாராவும் வெளிநாட்டு விமானங்களும் ஈரானிய வான்வெளியில் செல்வதைத் தவிர்த்துக் கொண்டுள்ளன.

புதுடெல்லி-டெல் அவிவ் பயணப் பாதையில் ஏர் இந்தியா விமானம் சனிக்கிழமை (ஏப்ரல் 13) இயக்கப்பட்டது. ஆனால், அவ்விரு நகர்களுக்கு இடையே வாரத்திற்கு நான்கு முறை விமானச் சேவையை வழங்குவது குறித்து ஏர் இந்தியா பரிசீலித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த அறிவிப்பு வெளிவரும்வரை, ஈரான் அல்லது இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என இந்தியா அதன் குடிமக்களுக்கு வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.

ஏர் இந்தியா 161 விமானம், சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு புதுடெல்லியில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்டது. ஆனால், ஈரானிய வான்வெளியில் அது செல்லவில்லை. மாறாக, வடக்குப் பயணப் பாதை வழியாக அது சென்றது.

“மத்திய கிழக்கில் உருவெடுத்துவரும் நிலவரம் காரணமாக, எங்களது விமான பயணப் பாதைகள் சிலவற்றில் மாற்றங்களைச் செய்கிறோம்,” என்று விஸ்தாரா பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!