யங்கூன்: மியன்மாரின் ராணுவ ஆட்சியாளர்களை எதிர்த்து பல அமைப்புகள் ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், மக்கள் தற்காப்புப் படை எனும் போராளி அமைப்பு, மியன்மார் நேரப்படி ஏப்ரல் 14ஆம் தேதி மாலை பியின் ஓ லுவின் நகரை நோக்கி 11 ஏவுகணைகளைப் பாய்ச்சியது.
இதன் காரணமாக அந்நகரில் உள்ள மருத்துவமனை, பௌத்த துறவு மாடம், ஹோட்டல் ஆகியவை சேதமடைந்தன.
தாக்குதலில் நான்கு பேர் மாண்டனர்; 12 பேர் காயமடைந்தனர்.
மாண்டோரில் இருவர் பௌத்த துறவிகள்.
அவர்களில் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிலையத்தில் இருந்த ராணுவ வீரர்களும் அடங்குவர்.