கோலாலம்பூர் விமான நிலைய துப்பாக்கிச்சூடு: ஏழு நாள் விசாரணைக் காவலில் சந்தேக நபர்

பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஏப்ரல் 14ஆம் தேதியன்று துப்பாக்கிச்சூடு நடத்தியவர் எனச் சந்தேகிக்கப்படும் 38 வயது ஹஃபிசுல் ஹராவியை ஏழு நாள்களுக்கு விசாரணைக் காவலில் வைத்திருக்க கிளந்தான் மாநில கோத்தா பாரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலேசியக் காவல்துறையின் விண்ணப்பத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

ஹஃபிசுலிடம் அதிகாரிகள் விசாரணை நடத்த ஏதுவாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 16ஆம் தேதி காலை 8.30 மணிக்கு ஹஃபிசுல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

ஹஃபிசுல், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தமது மனைவியைத் துப்பாக்கியால் சுட முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அவரது மனைவியான திருவாட்டி ஃபாரா முகம்மது இஸாவின் மெய்க்காப்பாளரது வயிற்றில் குண்டு பாய்ந்தது.

இதையடுத்து, ஹஃபிசுல் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

அவரை அதிதாரிகள் நாடெங்கும் வலைவீசித் தேடினர்.

கிட்டத்தட்ட 24 மணி நேரம் கழித்து அவர் கோத்தா பாருவில் கைது செய்யப்பட்டார்.

காயமடைந்த மெய்க்காப்பாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!