ரமலான் பாடல்களுக்கு தென்னிந்திய தாள வாத்தியங்கள்

புத்ரஜெயா: மலேசியாவில் நோன்புப் பெருநாள் பாடல்களைளுக்குத் தென்னிந்திய தாள வாத்தியங்களைக் கொண்டு வாசித்தது ஓர் இசைக் குழு.

சாய் நாக உருமி மேளம் எனும் தாள வாத்திய இசைக் குழுவைச் சேர்ந்த இளையர்கள் ‘சுவாசானா ஹரி ராயா’, ‘செலோக்கா ஹரி ராயா’ ஆகிய பாரம்பரிய ரமலான் பாடல்களுக்குத் தென்னிந்திய தாள வாத்தியங்களை வாசித்தது. சமூக ஊடகங்களில் இருக்கக்கூடிய இன ரீதியான கருத்து வேறுபாடுகளைத் தணிக்க இக்குழு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாய் நாக உருமி மேளம் முதன்முறையாக இந்த முயற்சியில் ஈடுபட்டது. டிக்டாக் தளத்தில் இரண்டு காணொளிகளைப் பதிவேற்றம் செய்தது. அவற்றின் மூலம் பல மலேசியர்களின் இதயத்தைத் தொட்டது.

குறிப்பாக அண்மையில் நோன்புப் பெருநாள் கொண்டாடிய முஸ்லிம் சமூகத்தினரை அந்தக் காணொளிகள் கவர்ந்தன.

அதனைத் தொடர்ந்து தாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் படைப்புகளை வழங்குமாறும் சிலர் சாய் நாக உருமி மேளக் குழுவைக் கேட்டுக்கொண்டனர்.

“ஏதேனும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் சாய் நாக உருமி மேளக் குழுவுக்கு இருந்தது. அந்த வகையில் இசை அனைவரையும் இணைக்கும் என்று நாங்கள் நம்பினோம். குறிப்பாக நோன்புப் பெருநாள் காலத்துக்கு இது பொருந்தும்,” என்று அந்தக் காணொளிகளில் இடம்பெற்றுள்ள தவில் வாசிப்பாளரான 22 வயது லோகேஸ்வரன், மலேசியாவின் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!