மோதல் எதிரொலி: தாய்லாந்தில் தஞ்சமடையும் மியன்மார் நாட்டினர்

மே சொட் (தாய்லாந்து): மியன்மாரையும் தாய்லாந்தையும் இணைக்கும் பாலம் அருகே மியன்மார் ராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அதனைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான மியன்மார் நாட்டைச் சேர்ந்த மக்கள் சனிக்கிழமை (ஏப்ரல் 20) அன்று மேற்கு தாய்லாந்திற்குத் தப்பியோடினர்.

தாய்லாந்துக்கும் மியன்மாருக்கும் இடையே இருக்கும் நட்பைப் பறைசாற்றும் விதமாகக் கட்டப்பட்ட இப்பாலம் மியன்மாரின் தாய்லாந்து எல்லையான மியாவடி பகுதியையும் தாய்லாந்தின் மியன்மார் எல்லையான மே சொட் நகரத்தையும் இணைக்கிறது.

எல்லைப் பகுதியில் உள்ள மியன்மாரின் மியாவடி நகரம் அந்நாட்டு ராணுவத்துக்கு எதிராக இயங்கும் கேரன் தேசிய ஒன்றியம் போன்ற அந்நாட்டு கிளர்ச்சியாளர்களின் வசம் சென்றது. இதனால் அப்பகுதியில் மியன்மார் ராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஒரு வாரத்திற்கும் மேலாகச் சண்டை நடந்து வருகிறது.

உத்திபூர்வ காரணங்களுக்காக முக்கியமானதாகக் கருதப்படும் மியன்வாடி நகரை இழந்ததால் எல்லை வர்த்தகத்திலிருந்து மியன்மாரின் ராணுவ அரசாங்கம் ஈட்டும் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் $1 பில்லியன் அமெரிக்க வெள்ளி (S$1.36 பில்லியன்) வர்த்தகம் நடந்த மியன்மாரின் முக்கிய வர்த்தக மையமாக மியன்வாடி நகரம் திகழ்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!