கெய்ரோ: கிட்டத்தட்ட 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட இரண்டாம் ரேம்சிஸ் மன்னரின் சிலையை எகிப்து மீட்டுள்ளது. அந்த சிலை 3,400 ஆண்டு பழமைவாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
1980களின் பிற்பகுதி அல்லது 1990களின் தொடக்கத்தில் அச்சிலை திருடப்பட்டு எகிப்திலிருந்து கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
2013ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஏலக் குத்தகையில் அச்சிலை விற்பனைக்கு விடப்பட்டபோது அது எகிப்திய அதிகாரிகளின் கண்களில் பட்டது.
அச்சிலை பல நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு கடைசியாக சுவிட்சர்லாந்தை அடைந்ததாக எகிப்திய அரசாங்கம் தெரிவித்தது.
சுவிட்சர்லாந்து அதிகாரிகளிடம் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 2023ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்துத் தலைநகர் பெர்னில் உள்ள எகிப்தியத் தூதரகத்திடம் இரண்டாம் ரேம்சிஸ் மன்னர் சிலை ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் அது அண்மையில்தான் எகிப்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
அச்சிலை தற்போது கெய்ரோவில் உள்ள எகிப்திய அரும்பொருளகத்தில் உள்ளது. ஆனால் அது காட்சிக்கு வைக்கப்படவில்லை.
கிபி 1279லிருந்து 1213ஆம் ஆண்டு வரை எகிப்தை இரண்டாம் ரேம்சிஸ் ஆண்டதாக எகிப்திய வரலாறு கூறுகிறது.