பிரபோவோவின் வெற்றியை உறுதி செய்த நீதிமன்றம்

ஜகார்த்தா: அண்மையில் இந்தோனீசியாவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் பிரபோவோ சுபியாந்தோ வெற்றி பெற்றார்.

தேர்தலில் மோசடி செய்துதான் பிரபோவோ வெற்றி பெற்றார் என்று அதிபர் தேர்தலில் களமிறங்கிய மற்ற வேட்பாளர்கள் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் வழக்கை விசாரத்த நீதிபதிகள் தேர்தலில் எந்த ஒரு மோசடிகளும் இடம்பெறவில்லை என்று கூறி ஏப்ரல் 22ஆம் தேதி பிரபோவோவின் வெற்றியை உறுதி செய்து தீர்ப்பளித்தனர்.

பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தல் வாக்களிப்பில் திரு பிரபோவோவும் அவரது துணை வேட்பாளர் ஜிப்ரான் ரக்காபுமிங் ரக்காவும் 58.59 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக 96,214,691 வாக்குகள் பதிவாயின.

அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட திரு அனீஸ் பஸ்வேடன்-முகைமின் இஸ்கந்தர் தரப்பு 24.95 விழுக்காட்டு வாக்குகளையும் திரு கஞ்சார் பிரனோவோ-மஹ்ஃபுட் முகமது தரப்பு 16.74 விழுக்காட்டு வாக்குகளையும் பெற்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!