இலங்கையில் ஈரானிய அதிபர்

கொழும்பு: ஈரானிய அதிபர் இப்ராகிம் ரய்சி புதன்கிழமையன்று (ஏப்ரல் 23) இலங்கைக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இருநாட்டு உறவை வலுப்படுத்தும் நோக்கில் திரு ரய்சி இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமது பயணத்தின்போது 514 மில்லியன் வெள்ளி மதிப்பிலான நீர்மின்சக்தித் திட்டம் ஒன்றையும் அவர் திறந்துவைப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு ஈரானிய அதிபர் ஒருவர் இலங்கைக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். திரு ரய்சியின் தற்போதைய பயணத்தின்போது இலங்கையும் ஈரானும் ஐந்து இணக்கக் குறிப்புகளில் கையெழுத்திடும்.

இலங்கையில் நீர்மின்சக்தி நிலையத்தைக் கட்ட ஈரான், 2010ஆம் ஆண்டில் ஒப்புக்கொண்டது. எனினும், 50 மில்லியன் வெள்ளியை வழங்கிய பிறகு ஈரானுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது.

அதற்கு அமெரிக்கா, ஈரான் மீது தடை உத்தரவுகளைப் பிறப்பித்ததே காரணம். அதனால் ஈரான், இலங்கைக்குப் பணம் அனுப்புவது சவாலானது. பிறகு எஞ்சிய தொகையை இலங்கை வழங்கியது.

கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலாலும் நீர்மின்சக்தி நிலையத்தைக் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!