பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் பேராக் மாநிலத்தில் ஏப்ரல் 23ஆம் தேதியன்று பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு கடற்படை ஹெலிகாப்டர்கள் விழுந்து நொறுங்கியதில் பத்து பேர் மாண்டனர்.
மாண்டோரில் மூவர் பெண்கள்.
கடற்படை அதிகாரிகளின் மரணச் செய்தி அவர்களது குடும்பத்தினரையும் நண்பர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மீளாத் துயரில் வாடும் அவர்கள், இந்தப் பேரிழப்பை எதிர்பார்க்கவில்லை என்று தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினர்.