இந்திய தயாரிப்பு மசாலாப் பொடிகளின் தகவல்களை சேகரிக்கும் அமெரிக்கா

ஹைதராபாத்: இந்தியாவில் தயாரிக்கப்படும் எம்டிஎச், எவரெஸ்ட் ஆகியவற்றின் மசாலாப் பொடிகளில் கலந்துள்ள பொருள்களின் விவரங்களை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்டிஏ) சேகரித்து வருகிறது.

அவற்றின் தயாரிப்புகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் பூச்சிக்கொல்லி ரசாயனம் அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

“நாங்கள் நிலைமையை அறிந்துள்ளோம். கூடுதல் விவரங்களை சேகரித்து வருகிறோம்,” என்று ஏப்ரல் 26ஆம் தேதி ராய்ட்டர்ஸிடம் ‘எஃப்டிஏ’ பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஹாங்காங் ஏப்ரலில் மூன்று எம்டிஎச் தயாரிப்பு மசாலாப் பொருள்களுக்கும் எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாப் பொருளுக்கும் தடை விதித்தது.

சிங்கப்பூரும் எவரெஸ்ட் மசாலாப் பொருள்களை மீட்டுக் கொள்ள உத்தரவிட்டது. அதில் எத்திலின் ஆக்சைட் அளவுக்கு அதிகமாக கலந்து இருப்பதாகவும் அது புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும் சிங்கப்பூர் கூறியிருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!