இந்தோனீசியாவின் இபூ எரிமலை குமுறியது

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள இபூ எரிமலை வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின் குமுறியது.

எரிமலையில் இருந்து 3 கிலோமீட்டர் உயரம் வரை அதன் சாம்பல் வானத்தை நோக்கிப் பறந்தது. எரிமலை இருக்கும் வட்டாரத்தில் உள்ள மக்கள் அதன் அருகே செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இபூ எரிமலை வடக்கு மலுக்கு மாநிலத்தில் உள்ள ஹல்மஹெரா தீவில் உள்ளது. இபூ எரிமலை உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12.37 மணிக்குக் குமுறியது.

எரிமலை மூன்று நிமிடங்களுக்கு மேல் குமுறியதாக அதைக் கண்காணிக்கும் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28) தகவல் வெளியிட்டனர்.

எரிமலையைச் சுற்றியுள்ள இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அவ்வட்டாரத்தில் இருந்து மக்கள் வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவிக்கவில்லை. இருப்பினும் வெளியே செல்லும்போது முகக்கவசம், கண்ணாடிகள் அணிந்துகொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இபூ எரிமலை 1,325 மீட்டர் உயரம் கொண்டது.

இம்மாதத் தொடக்கத்தில் இந்தோனீசியாவின் வடக்கு சுலாவெசியில் உள்ள ருவாங் எரிமலை வெடித்தது. பாதுகாப்புக் காரணங்கள் கருதி அவ்வட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!