கோலாலம்பூர்: சீர்குலைவுச் செயலில் ஈடுபட்டதாக பெர்சத்து கட்சியின் தகவல் குழு உறுப்பினர் பட்ருல் ஹிஷாம் ஷஹாரின் மீது ஏப்ரல் 30ஆம் தேதியன்று ஜோகூர் பாரு நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோகூர் மாநிலத்தில் உள்ள ஃபாரஸ்ட் சிட்டி பகுதியில் சூதாட்டக் கூடம் திறப்பது குறித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்த கருத்துகள் தொடர்பில் தம்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட இருப்பதாக பட்ருல் கூறினார்.
இந்நிலையில், சீர்குலைவுச் செயல் தொடர்பாகவும் மலேசிய மாமன்னருக்கு எதிராக அவதூறு பரப்பியது தொடர்பாகவும் பட்ருல் மீது ஏற்கெனவே இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவற்றை எதிர்த்து அவர் வழக்கு விசாரணை கோரியுள்ளார்.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை 45 வயது பட்ருல் மறுத்துள்ளார்.