தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்‌ரேலுக்கு பேரளவிலான ஆயுதங்களை அனுப்ப பைடன் அரசாங்கம் திட்டம்

2 mins read
1a596ca0-f666-48e4-9ca5-db14eb7d719f
மே 14ஆம் தேதியன்று ராஃபாவில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் இஸ்‌ரேல் அதன் கவச வாகனங்களை அனுப்பியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பாலஸ்தீனர்கள் தெரிவித்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: இஸ்‌ரேலுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் (S$1.35 பி) அதிகப் பெறுமானமுள்ள ஆயுதங்களை அனுப்பிவைக்கத் திட்டமிட்டுவதாக அமெரிக்க நாடாளுமன்றத்திடம் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ராஃபா நகரில் மில்லியன்கணக்கான பாலஸ்தீனர்கள் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் அங்கு தாக்குதல் நடத்த வேண்டாம் என்றும் இஸ்‌ரேலிடம் உலக நாடுகள் கூறிவரும் நிலையில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் இந்த முடிவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பைடன் அரசாங்கம் இஸ்‌ரேலுக்கு அனுப்பிவைக்க இருக்கும் ஆயுதங்களில் கவச வாகனங்கள், கவச வாகனங்களுக்கான குண்டுகள் முதலியவை அடங்கும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் அதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் முதலில் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ராஃபா மீது இஸ்‌ரேல் தாக்குதல் நடத்தினால் அதற்கு ஆயுதங்கள் அனுப்புவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ளும் என்றும் அதிபர் பைடன் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மே 14ஆம் தேதியன்று ராஃபாவில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் இஸ்‌ரேல் அதன் கவச வாகனங்களை அனுப்பியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பாலஸ்தீனர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி பாலஸ்தீனர்கள் மீது இஸ்‌ரேல் தாக்குதல்கள் நடத்தி அனைத்துலகச் சட்டத்தை மீறியிருக்கக்கூடும் என்று மே 10ஆம் தேதியன்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்திருந்தது.

அக்டோபர் 7த் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பலியான கிட்டத்தட்ட 1,200க்கும் பிணைக்கைதிகளான 252 பேருக்கும் பதிலடியாக நடத்திய தாக்குதல்கள் காரணமாக காஸாவில் இதுவரை 35,170க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் மாண்டுவிட்டதாக ஹமாஸ் தலைமையிலான சுகாதார அமைச்சு கூறியது.

குறிப்புச் சொற்கள்