உக்ரேனுக்கு ஆதரவாக ரஷ்ய சொத்துகளை பயன்படுத்த ஜி7 ஆலோசனை

1 mins read
84bc984c-cfe5-4d95-9492-71800b8a83ad
டோனெட்ஸ்க் வட்டாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தத் தயாராக இருக்கும் உக்ரேனிய வீரர். - படம்: ராய்ட்டர்ஸ்

ஸ்ட்ரெசா (இத்தாலி): உக்ரேனுக்கு உதவ ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகளிலிருந்து கிடைக்க இருக்கும் லாபத்தைப் பயன்படுத்துவது பற்றி ஜி7 நாடுகள் முடிவெடுக்க உள்ளன.

ஜி7 அமைப்பில் இடம்பெற்று உள்ள நிதித் தலைவர்கள் இதனை சனிக்கிழமை (மே 25) தெரிவித்தனர்.

2022 பிப்ரவரியில் தனது அண்டை நாடான உக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்கத் தொடங்கிய சிறிது நாள்களிலேயே ரஷ்யாவின் US$300 பில்லியன் (S$405 பில்லியன்) சொத்துகள் சிலவற்றை ஜி7 அமைப்பு முடக்கியது.

“முடங்கிக் கிடக்கும் ரஷ்யாவின் அரசுரிமைச் சொத்துகளில் இருந்து கிடைக்கும் மிதமிஞ்சிய லாபத்தின் மூலம் உக்ரேன் பலனடைவதற்கான வழிவகைகளை ஆராய்ந்து வருகிறோம்,” என்று ஜி7 அமைப்பு வரைந்த அறிக்கையை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இருப்பினும், வெளிப்படையாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அந்த அறிக்கையில் முக்கிய மாற்றங்கள் இருக்காது என்றது ராய்ட்டர்ஸ்.

ஈராண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரில் தனது வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை ரஷ்யாவிடம் பறிகொடுத்துவிடாமல் தக்கவைத்துக்கொள்ள உக்ரேன் கடுமையாகப் போராடி வருகிறது.

இந்நிலையில், ஜி7 நிதி அமைச்சர்களின் கூட்டத்தில் உக்ரேனிய நிதி அமைச்சர் செர்ஹைவ் மார்சென்கோ பங்கேற்க உள்ளார்.

குறிப்புச் சொற்கள்