விமான இறக்கையின்மீது படம் எடுத்துக்கொண்ட சிப்பந்திகள்

சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்சிற்குச் சொந்தமான போயிங் 777 ரக விமானத்தின் இறக்கையின்மீது அதன் சிப்பந்திகள் புகைப்படம் எடுத்துக்கொண்டதன் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

அர்ஜெண்டினாவின் நகரில் அந்த விமானம் நின்றிருந்தபோது அச்சிப்பந்திகள் அவ்வாறு படமெடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

அச்சம்பவம் தொடர்பான காணொளி, ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இணையத்தில் பரவியது.

அதில் பெண் சிப்பந்தி ஒருவர் விமான இறக்கையின்மீது நடனமாடுவதும் புகைப்படம் எடுத்துக்கொள்வதும் காணப்படுகிறது.

பின்னர் அவருடன் சேர்ந்துகொண்ட ஆடவர் ஒருவர் உடற்கட்டழகுப் பயிற்சி செய்வதுபோல் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவர் விமானச் சிப்பந்திகள் குழுவின் தலைவர் என்று தெரியவந்தது.

ஆகஸ்ட் 16ஆம் தேதி விமானம் புறப்படச் சிறிது நேரம் முன்னதாக அச்சம்பவம் நிகழ்ந்ததாக அமெரிக்க ஊடகமான இன்சைடர் தெரிவித்தது.

சிப்பந்திகள் படமெடுத்துக்கொண்டபோது விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை என்றும் கூறப்பட்டது.

“சிப்பந்திகளின் செயல், சகித்துக்கொள்ள முடியாத நடவடிக்கை. வேடிக்கைபோல் தோன்றினாலும் அது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய செயல்,” என்று விமான நிறுவனத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.

விமானச் சிப்பந்திகள் மீதான பயணிகளின் நம்பிக்கையை இச்செயல் குலைக்கக்கூடும் என்பதைக் கவனிப்பாளர்கள் சுட்டினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!