7-11 கடையை அடித்து நொறுக்கிய ஆடவர்

தைவானில் 7-11 கடை ஒன்றை ஆடவர் ஒருவர் அடித்து நொறுக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

ஆடவர் காவல்துறை அதிகாரிகளை அடிக்கச் செல்வதும் அதன் பின்னர் அவரை அதிகாரிகள் கைது செய்வதும் காணொளியில் இடம்பெற்றிருந்தது.

சம்பவம் மே 20ஆம் தேதி காலை தோயுவான் பகுதியில் உள்ள 7-11 கடையில் நடந்ததாக தைவானிய செய்தி நிறுவனங்கள் கூறின.

கட்டுடல் கொண்ட சூ என்னும் 28 வயது ஆடவர் கடைக்குள் சட்டையில்லாமல் நுழைந்துள்ளார், சந்தேகம் வருவது போல் நடந்து கொண்ட ஆடவர் கடையில் உள்ள பொருள்களை சேதப்படுத்தியுள்ளார். 

அதைக் கண்ட கடை ஊழியர் காவல்துறைக்குத் தகவல்கொடுத்தார். 

அதிகாரிகளைக் கண்ட ஆடவர் கோபமடைந்து கடையை அடித்து நொறுக்கினார். காவல்துறை அதிகாரி ஒருவரையும் அவர் தாக்கச் சென்றார். 

சிறிது நேரத்திற்கு பிறகு அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைதான நபரை அதிகாரிகளில் ஒருவர் கடுமையாகத் தாக்கும் காட்சியும் காணொளியில் இடம்பெற்றிருந்தது. 

அதைத்தொடர்ந்து அந்த காவல்துறை அதிகாரி மீதும் விசாரணை நடத்தப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!