தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சட்டவிரோதக் குடியேறிகள் 70 பேர் தாய்லாந்தில் கைது

1 mins read
மியன்மாரிலிருந்து வந்த ரோஹிங்யாக்கள் என நம்பப்படுகிறது
6db8232a-a727-404d-8af2-92bfe4948248
கைது செய்யப்பட்டோரில் 30 பேர் குழந்தைகள். - படம்: பிக்சாபே

பேங்காக்: தாய்லாந்தின் தென்பகுதியில் சட்டவிரோதக் குடியேறிகள் 70 பேரைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் நவம்பர் 16ஆம் தேதி தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டோரில் 30 குழந்தைகளும் அடங்குவர்.

அவர்கள் அனைவரும் மியன்மாரைச் சேர்ந்த ரோஹிங்யாக்கள் என நம்பப்படுகிறது.

ரோஹிங்யா முஸ்லிம்களைத் தெற்கு ஆசியாவிலிருந்து வந்த, தேவையின்றித் தலையிட்டுத் தொந்தரவு செய்பவர்களாகக் கருதுகிறது மியன்மார். அதனால் மியன்மாரில் அவர்களுக்குக் குடியுரிமை மறுக்கப்படுவதுடன் ரோஹிங்யாக்கள் தீங்குகளுக்கும் ஆளாகின்றனர்.

“முதற்கட்ட விசாரணையில், தாங்கள் மியன்மாரைச் சேர்ந்த முஸ்லிம்கள் என்று கூறிய அவர்கள் மலேசியா அல்லது இந்தோனீசியா நோக்கிச் செல்வதாகக் கூறினர்,” என்று தாய்லாந்துக் காவல்துறை கூறியது.

கடந்த சில ஆண்டுகளாக ரொஹிங்யாக்கள் சிறு படகுகளில் தாய்லாந்து, பங்ளாதேஷ் போன்ற அண்டை நாடுகளை நோக்கிச் செல்வது வழக்கமாகியுள்ளது.

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மலேசியாவிற்கும் இந்தோனீசியாவிற்கும் அவர்கள் செல்ல முயல்கின்றனர்.

அக்டோபர் முதல் ஏப்ரல் வரை கடல் அமைதியாக இருக்கும் காலகட்டத்தில் அவர்கள் அவ்வாறு பயணம் செய்கின்றனர்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய தாய்லாந்து அதிகாரிகள், “சட்டவிரோதமாகத் தாய்லாந்திற்குள் நுழைந்த அவர்கள் ரோஹிங்யாக்கள் என்பதையோ மியன்மாரைச் சேர்ந்தவர்கள் என்பதையோ இன்னும் முடிவு செய்ய இயலவில்லை,” என்று கூறினர்.

அதுகுறித்த விசாரணை தொடர்வதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்