ஒரே வாரத்தில் பாலி கடற்கரையில் மாண்டு ஒதுங்கிய மூன்றாவது திமிங்கிலம்

இந்தோனீசியாவின் பாலித்தீவு கடற்கரைப் பகுதியில் மீண்டும் ஒரு திமிங்கிலம் மாண்டு கரைஒதுங்கியுள்ளது.

கிட்டத்தட்ட 17 மீட்டர் நீளம் கொண்ட அந்தத் திமிங்கிலம் பாலியின் ஜெம்பிரானாவில் உள்ள ‘யெ லே’ கடற்கரையில் சனிக்கிழமை (ஏப்ரல் 8) பிற்பகல் கரை ஒதுங்கியதாக அதிகாரிகள் கூறினர்.

கடந்த ஒருவாரத்தில் மட்டும் பாலியில் மாண்டு கரை ஒதுங்கிய மூன்றாவது பெரிய வகை திமிங்கிலம் இது. 

மருத்துவச் சோதனைகள் நடத்திய பிறகு திமிங்கிலத்தை புதைக்கவுள்ளதாகப் அதிகாரிகள் தெரிவித்தனர். 

திமிங்கிலத்தின் உறுப்புகளை மக்கள் திருடிவிடக்கூடாது என்பதற்காகக் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 5) பாலியின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் 18 மீட்டர் நீளம் கொண்ட திமிங்கிலம் கரை ஒதுங்கியது. 

ஏப்ரல் 1ஆம் தேதி இரண்டு டன் எடைக்கு மேலும் 11 மீட்டர் நீளமும் கொண்ட திமிங்கிலம் மாண்டு கரை ஒதுங்கியது.

மாண்ட இரண்டு திமிங்கிலமும் உடல்நலக்குறைவால் இறந்திருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். 

சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் பாலித்தீவில் தொடர்ந்து திமிங்கிலம் மாண்டு கரை ஒதுங்குவது அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!