102 பிள்ளைகளை பெற்ற பின்பு போதும் என்கிறார் தந்தை

உகண்டாவைச் சேர்ந்த கசேரா என்பவருக்கு தன்னுடைய அத்தனை பிள்ளைகளின் பெயர்கள் ஞாபகத்தில் இல்லை. ஒன்று, இரண்டு பெற்றிருந்தால் ஞாபகத்தில் வைத்திருக்க முடியும். இவர் பெற்றதோ 102 பிள்ளைகள். 

கசேராவுக்கு மொத்தம் 12 மனைவிகள், 102 பிள்ளைகள், 578 பேரப்பிள்ளைகள். இது போதும் என்கிறார் குடும்பத்திற்காக ஓயாமல் உழைக்கும் கசேரா. 

முதலில் நன்றாகத்தான் இருந்தது. இப்போது அதுவே பிரச்சினையாகிவிட்டது என்கிறார் 68 வயதான கசேரா. 

தன்னுடைய மனைவிகள் குடும்பக் கட்டுப்பாடு மருந்துகள் எடுத்துக்கொள்வதாகக் கூறிய கசேரா தன்னுடைய பொறுப்பற்ற செயலால் இப்போது தவிப்பதாக ஒப்புக்கொண்டார். 

கசேராவின் பிள்ளைகள் 10 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். இவரது கடைசி மனைவியின் வயது 35. 

 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!