வாஷிங்டன்/டெஹ்ரான்: ஈரானுடனான போரை நிறுத்தவும் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவும் வகைசெய்யும் இடைக்கால ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் எதிர்பார்க்கப்பட்டதற்கு முன்னரே கையெழுத்தாகியுள்ளது.
நிலைமை ஈரானுக்குச் சாதகமாக இருப்பதாகக் கூறப்பட்டதைக் குடியரசுக் கட்சியின் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் மறுத்த சூழலிலும் ஒப்பந்தம் முன்னரே கையெழுத்தாகியிருக்கிறது. ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறந்துவிட ஈரான் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டதா என்பது இன்னும் தெரியவில்லை.

