துபாய்/வாஷிங்டன்: அமெரிக்க ராணுவம், ஈரானியக் கடலோரக் கண்காணிப்புத் தளங்களின்மீது சனிக்கிழமை (ஜூன் 5) தனது படையினர் தாக்குதல் நடத்தி இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை நோக்கி ஈரான் ஏவிய ஆளில்லா வானூர்திகளைச் சுட்டு வீழ்த்தியதாக அது குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளைச் சிக்கலாக்கும் எனக் கூறப்படுகிறது.
வட்டாரக் கடல்வழிப் போக்குவரத்தைக் குறிவைத்து நான்கு வானூர்திகளை ஈரான் ஏவியதாக அமெரிக்க ராணுவம் கூறுகிறது.
அதனைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையில் அமைந்துள்ள கோருக், கெஷ்ம் தீவுகளில் உள்ள ஈரானின் கண்காணிப்புத் தளங்கள்மீது தனது படையினர் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா மத்திய தலைமையகம், ‘எக்ஸ்’ பதிவில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக நீடித்துவரும் போரை முடிவுக்குக் கொண்டுவர ஓர் இடைக்கால உடன்பாட்டை எட்ட, அமெரிக்காவும் ஈரானும் மறைமுகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து மேற்கொண்டு பேச்சு நடத்த இருப்பதால் உடன்பாட்டில் அந்த அம்சம் இடம்பெறாது என்று கூறப்படுகிறது.
அதிகரித்துவரும் எரிவாயு விலைகள் காரணமாக இந்தப் போரை அமெரிக்க மக்கள் விரும்பவில்லை. எனவே போரை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என உள்நாட்டில் அதிகரித்துவரும் அழுத்தத்தை அதிபர் டோனல்ட் டிரம்ப் எதிர்நோக்கி வருகிறார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அதிகரித்துவரும் எரிவாயு விலைகள் காரணமாக, மக்கள் விரும்பாத இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற அதிகரித்துவரும் உள்நாட்டு அரசியல் அழுத்தத்தை எதிர்கொள்கிறார்.

