மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் குறைக்க $2 பில்லியன் செலவு

வாஷிங்டன்: எண்ணெய், எரிசக்தித் துறையிலிருந்து மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும் கண்காணிக்கவும் அமெரிக்க அரசாங்கம் US$1.55 பில்லியன் (S$2 பில்லியன்) வரையிலான நிதியை வழங்கும் என்று இரண்டு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கசிவுகளிலிருந்தும் அன்றாடச் செயல்பாடுகளிலிருந்தும் வெளியாகும் மீத்தேன் வாயுவைக் குறைக்க நிறுவனங்களுக்குத் தொழில்நுட்ப உதவி வழங்கப்படும் என்று அமெரிக்க சுற்றுப்புறப் பாதுகாப்பு அமைப்பு கூறியது.

எண்ணெய், எரிவாயுச் செயல்பாடுகளிலிருந்து வெளியாகும் மீத்தேன் வாயுவின் அளவு, ஓர் ஆண்டுக்கு மில்லியன்கணக்கான வீடுகளுக்குத் தேவையான எரிசக்தியைப் பூர்த்திசெய்ய போதுமானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

சிறிய எண்ணெய்க் கிணறுகளிலிருந்து வெளியாகும் மீத்தேன் வாயுவை நிரந்தரமாகக் குறைக்க, அமெரிக்க எரிசக்தித் துறையின் தேசிய எரிசக்தித் தொழில்நுட்ப ஆய்வகத்தின் மூலம் மாநிலங்களுக்கு US$350 மில்லியன் வரை நிதி வழங்கப்படும்.

ஒட்டுமொத்த தாக்கம் 2022க்கும் 2025க்கும் இடைப்பட்ட காலத்தில் 15 பில்லியன் மெட்ரிக் டன் அளவிலான கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!