மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தைக் கடந்த வாரம் வெள்ளம் புரட்டி எடுத்தது.
வெள்ளம் ஏற்பட்ட இடங்களைச் சேர்ந்தவர்கள் மிகக் கடுமையாகப் பாதிப்படைந்தனர்.
பாதிக்கப்பட்ட கிராமப் பகுதிகளுக்கு இட்டுச் செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டன.
ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பசியால் வாடும் ஆஸ்திரேலியர்களுக்கு மெல்பர்னைச் சேர்ந்த சீக்கிய அறநிறுவனம் உணவு வழங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அறநிறுவனத்தின் தொண்டூழியர்கள் நேரில் சென்று அங்குள்ள கடைத்தொகுதியின் வாகன நிறுத்துமிடத்தில் தற்காலிகச் சமையலறை ஒன்றை அமைத்து உணவு சமைத்து சுடச்சுடப் பரிமாறினர்.
தொண்டூழியர்கள் தயாரித்த பாஸ்டா, சோறு, காய்கறிக் குழம்பு, தேநீர் போன்றவற்றை அங்குள்ள மக்கள் உண்டு மகிழ்ந்தனர்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் கடலோரப் பகுதியில் 50,000க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிப்படைந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
ஐந்து பேர் மாண்டனர்.
இந்நிலையில், கடந்த மூன்று நாள்களில் உணவு சமைத்து கிட்டத்தட்ட 3,000 பேரின் பசியை ஆற்றியுள்ளது ஆஸ்திரேலிய சீக்கியத் தொண்டூழியர்கள் அறநிறுவனம்.
2017ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ, வெள்ளம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு இந்த அறநிறுவனம் இலவச உணவு வழங்கி வருகிறது.

