நியூயார்க் ரயிலில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்

1 mins read
8b35a4a8-faac-4105-93f2-12091637a401
33 வயது செபாஸ்டியன் ஸபேட்டாமீது கொலை, தீமூட்டுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. - படங்கள்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: அண்மையில் நியூயார்க் நகரில், ரயில் ஒன்றில் பெண் ஒருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.

மாண்ட பெண்ணின் அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.

மாண்டவர் 57 வயது டெப்ரினா கவாம் என்றும் அவர் நியூ ஜெர்சியைச் சேர்ந்தவர் என்றும் நியூயார்க் மருத்துவ அதிகாரி அலுவலகம் டிசம்பர் 31ஆம் தேதியன்று தெரிவித்தது.

விரல் ரேகை மூலம் அவர் அடையாளம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ரயில் நிலையத்தில் நிறுத்திவைப்பட்டிருந்த ரயிலில் தூங்கிக்கொண்டிருந்த கவாமை குவாத்தமாலா நாட்டவரான 33 வயது செபாஸ்டியன் ஸபேட்டா உயிருடன் எரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

அவர்மீது கொலை, தீமூட்டுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஸபேட்டா 2018ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்தார்.

வந்த சில நாள்களில் அவர் குவாத்தமாலாவுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டார்.

அதையடுத்து, அவர் மீண்டும் அமெரிக்காவுக்கு எப்போது வந்தார் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்