விமானத்தில் கொடூர கொலையாளிக்கு பக்கத்தில் அமர்ந்த மாதின் படம் பரவலானது

விமானத்தில் கொடூர கொலையாளிக்கு பக்கத்தில் அமர்ந்த மாதின் படம் பரவலானது

1 mins read
27322875-b91f-4e2b-81bd-3d7fe0f4a275
விமானத்தில் அமர்ந்திருக்கும் சார்ல்ஸ் சோப்ராஜ். படம்: ஏஎஃப்பி -
multi-img1 of 2

1970களில் ஆசியாவில் பல கொலைகளைச் செய்திருந்த தொடர் கொலையாளி சார்ல்ஸ் சோப்ராஜ், அண்மையில் நேப்பாள சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்டார்.

நேப்பாளத்திலிருந்து கத்தார் தலைநகர் தோஹாவுகு கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் அவர் பயணம் செய்தார். அங்கிருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு அவர் செல்லவிருந்தார்.

இந்நிலையில், விமானத்தில் சோப்ராஜுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த மாதின் படம் சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

இருபது பேருக்கு மேற்பட்டோரைக் கொன்ற தொடர் கொலையாளிக்கு பக்கத்திலா அமர்ந்திருக்கிறோம் என்ற அதிர்ச்சி அந்த மாதின் முகத்தில் தென்பட்டதாகத் தெரிகிறது.

அந்த மாதின் எதிர்வினையைத் தங்களால் புரிந்துகொள்ள முடிவதாக இணையவாசிகள் பலரும் கருத்துரைத்துள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த தந்தைக்கும் வியட்னாமிய தாய்க்கும் பிறந்த சோப்ராஜ், கொள்ளையனாக மாறி, பல நாடுகளுக்கும் பயணம் செய்தார். தனது கொலைகளை அவர் தாய்லாந்தில் தொடங்கினார்.

கிட்­டத்­தட்ட 20 ஆண்­டு­கால சிறை­வா­சத்­திற்­குப் பின்­னர் அவரை விடு­தலை செய்ய கடந்த புதன்­கி­ழமை நேப்­பாள உச்ச நீதி­மன்­றம் உத்­தரவிட்­டது.

வயது முதிர்ச்­சி­யைக் கார­ணம் காட்டி அது விடு­தலை செய்­தது.