ஜோகூர் சட்டமன்ற சபாநாயகராக ஸஹாரி சரிப் பதவியேற்பு

ஜோகூர் சட்டமன்ற சபாநாயகராக ஸஹாரி சரிப் பதவியேற்பு

1 mins read
9b5b086d-9e2a-434c-9742-2048e7030809
பூலோ கசாப் சட்டமன்ற உறுப்பினர் ஸஹாரி சரிப்.   - படம்: ஜோகூர் மாநில அரசாங்கம்
Google News Preferred Icon

இஸ்கந்தர் புத்ரி: பூலோ கசாப் சட்டமன்ற உறுப்பினர் ஸஹாரி சரிப், ஜோகூர் மாநில சட்டமன்ற சபாநாயகராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அப்பதவியை ஏற்றுக்கொண்டார்.

59 வயதான, ஜோகூர் வேளாண்மை, வேளாண் சார்ந்த தொழில், ஊரக வளர்ச்சிக் குழுவின் முன்னாள் தலைவரான இவரை, செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) நடைபெற்ற ஜோகூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஓன் ஹபீஸ் காசி முன்மொழிந்தார்.

புக்கிட் பெர்மாய் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜஃப்னி முகமது ஷுகோர் இந்த முன்மொழிவை ஆதரித்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஜோகூர் மாநிலத் தேர்தலுக்குப் பிறகு சபாநாயகர் பதவியை வகித்த முகமது புவாட் ஸர்காஷிக்குப் பதிலாக ஸஹாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில அம்னோ தலைமையுடன் கருத்து வேறுபாடு கொண்டுள்ள முகமது புவாட், முன்னதாக ஜூன் 25ஆம் தேதி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

முதல் அமைச்சர் தம் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு ஸஹாரி தமது நன்றியைத் தெரிவித்தார்.

“தம்முடைய கடமைகளை முழுப் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றுவேன்,” என்றும் அவர் கூறினார்.

பாரிசான் நேஷனல் கூட்டணியைச் சேர்ந்த ஸஹாரி, அண்மையில் நடந்த ஜோகூர் மாநிலத் தேர்தலில் பூலோ காசாப் மாநிலத் தொகுதியை வெற்றிகரமாகத் தக்க வைத்துக் கொண்டார்.

அவர் 14,054 வாக்குகளைப் பெற்று, 5,454 வாக்குகளைப் பெற்ற தனக்குப் போட்டி கொடுத்த பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் ரோஸி ரசித்தைத் தோற்கடித்தார்.

குறிப்புச் சொற்கள்
ஜோகூர்அம்னோசபாநாயகர்