இலக்கியம் போற்றிய கருத்தரங்கு; இளையர்கள் தமிழுக்குக் குரல்கொடுப்பதே முதன்மை இலக்கு

இலக்கியம் போற்றிய கருத்தரங்கு; இளையர்கள் தமிழுக்குக் குரல்கொடுப்பதே முதன்மை இலக்கு

2 mins read

பல்­க­லைக்­க­ழக புகு­முக வகுப்பு மாண­வர்­க­ளுக்­காக ஈசூன் இன்­னோவா தொடக்­கக் கல்­லூரி ஏற்­பாடு செய்­தி­ருந்த தமிழ்­மொழி, இலக்­கி­யக் கருத்­த­ரங்கு, இளை­யர்­கள் தமி­ழி­லக்­கி­யத்­தைச் சுவைக்­க­வும் அத­னைப் போற்­ற­வும் நல்­வாய்ப்­ப­ளித்­தது.

இம்மாதம் 15ஆம் தேதி­யன்று ஈசூன் இன்­னோவா தொடக்­கக் கல்­லூ­ரி­யில் இடம்­பெற்ற இந்த ­நி­கழ்ச்­சி­யில் தமிழ் ஆர்­வ­லர்­கள், பல்­க­லைக்­க­ழக புகு­முக வகுப்பு மாண­வர்­கள், ஆசி­ரி­யர்­கள் என பல­த­ரப்­பி­ன­ரும் பங்கேற்றனர்.

இலக்­கி­யத் திற­னாய்வு என்­றால் என்ன என்­பதை விளக்­கி­யும் இலக்­கி­யத்தை நாம் எவ்­வாறு மேன்­மே­லும் போற்­ற­லாம் என்­பதைப் பற்றி பேசி­யும் மாண­வர்­கள் வியக்க வைத்­த­னர்.

இலக்­கி­யத் திற­னாய்­வும் அழ­கி­ய­லும் என்ற கருப்­பொ­ரு­ளு­டன் இடம்­பெற்ற இலக்­கி­யத் திற­னாய்­வுப் பயி­ல­ரங்­கைப் புகழ்­பெற்ற தமி­ழ­கக் கவி­ஞ­ரும் எழுத்­தா­ள­ரு­மான கடற்­க­ரய் மத்­த­வி­லாச அங்­க­தம் வழி­ந­டத்­தி­னார்.

இலக்­கி­யத் திற­னாய்­வுக் கட்­டு­ரைப் போட்­டி­யும் நடத்­தப்­பட்டு, வெற்­றி­பெற்ற மாண­வர்­க­ளுக்­குப் பரி­சு­கள் வழங்­கப்­பட்­டன.

முதல் பரிசு வென்ற ஆண்டர்சன்-சிராங்கூன் தொடக்­கக் கல்­லூரி இரண்­டா­மாண்டு மாண­வ­ரான வாசு­தே­வன் அஷ்­வின்­ராஜ், 18, "கவி­தை­களில் கூற­வ­ரும் கருத்து மறை­மு­க­மாக இருப்­ப­தால் கவி­தை­களை ஆராய்­வ­தி­லேயே ஒரு தனி சுவா­ர­சி­யம் இருப்­ப­தாக உணர்­கி­றேன்," என்று கூறி­னார்.

"ஒரு மாண­வ­ராக ஒரு கவி­தை­யையோ சிறு­க­தை­யையோ படிப்­பது மட்­டு­மல்­லா­மல், கவி­ஞரோ எழுத்­தா­ளரோ எவ்­வாறு சிந்­தித்­தி­ருப்­பார் என்­ப­தை­யும் நமக்­கும் என்­னென்ன சிந்­த­னை­கள் தோன்­று­கின்­றன என்­ப­தை­யும் ஆரா­யும்­போது தமிழ் இலக்­கி­யத்­தைப் பற்றி இன்­னும் ஆழ­மா­கத் தெரிந்­து­கொள்ள முடி­கிறது," என்­றார் இரண்­டாம் பரிசு வென்ற, அதே ஆண்டர்சன்-சிராங்கூன் தொடக்­கக் கல்­லூரியைச் சேர்ந்த இன்னொரு மாண­வர் ரகு­நந்தன், 19.

"பயி­ல­ரங்­கில் மாண­வர்­க­ளின் செயல்­தி­றன் மிக அழ­காக வெளிப்­பட்­டது. எதிர்­கா­லத்­தில் மாண­வர்­களும் தமிழ்மொழிக்­குக் குரல் கொடுக்க வேண்­டும் என்­பதே இதுபோன்ற பயி­ல­ரங்­கு­க­ளின் முதன்மை நோக்­க­மா­கும்," என்று கவிஞர் கடற்­க­ரய் சொன்­னார்.