தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறைக் கைதிகளின் மறுவாழ்வுக்கு உதவும் கலை

2 mins read

சிறைக் கைதி­க­ளின் வாழ்­வில் மறு­வாழ்­வுப் பய­ணம் முக்­கிய அங்கம் வகிக்­கிறது.

சிறை­யி­லி­ருந்து விடு­த­லை பெற்­ற­வு­டன் அவர்­கள் சமு­தா­யத்­துக்­குள் தங்­களை ஒன்­றி­ணைத்­துக்கொள்­ள­வும் சிறை­யில் கற்றுக்­கொள்­ளும் பாடங்­கள் துவ­ளா­மல் இருக்­க­வும் சிறை அதி­கா­ரி­கள் தன்­ன­ல­மின்றி கைதி­களை அர்த்­த­முள்ள மனி­தர்­க­ளாக உரு­மாற்­றம் காணும் பொறுப்பை மேற்­கொள்­கின்­ற­னர்.

தன்­னால் முடிந்­த­வ­ரை பிற­ருக்கு உதவ வேண்டும் என்ற முனைப்­பு­டன் காத்­தி­ருக்­கும் 34 வயது ராகினி அன்­ப­ழ­கன் தனது வாழ்க்­கைத்­தொ­ழி­லை­யும் அதைப் பறை­சாற்­றும் வித­மாக தேர்ந்­தெ­டுத்­துள்­ளார்.

மறுவாழ்வுப் பிரிவு அதி­கா­ரி­யா­க­வும், தலை­மைச் சிறைக் காவல் அதி­கா­ரி­யா­க­வும் இருக்­கும் ராகினி, பெண்­கள் சிறைப் பிரி­வில் சேவை­யாற்றி வரு­கி­றார்.

21 வய­துக்கும் கீழ் இருக்­கும் கைதி ஒரு­வர் போதைப் புழக்­கத்­திற்கு அடி­மை­யா­னது மட்­டு­மின்றி அவர் வாழ்க்­கை­யில் பல இன்­னல்­க­ளை­யும் கடந்து வந்­த­தை­யும் நினை­வு­கூர்ந்த ராகினி, அவ­ரு­டன் மறு­வாழ்வு அமர்­வில் நேரத்­தைச் செல­விட்­ட­போது கைதி ஒரு வெள்ளைத் தாளில் கிறுக்கி எழு­து­வ­தைக் கவ­னித்­தார். கைதிக்­குக் கலை­யில் அதீத ஆர்­வம் இருப்­ப­தைக் கண்­ட­றிந்த ராகினி பின்­னர் அந்­தக் கைதி கலை மூலம் தன்னை உணர்வு பூர்­வ­மாக வெளிப்­ப­டுத்­தி­ய­தை­யும் உணர்ந்­தார். இது பிற கைதிகளுக்­கும் உத­வும் என்று உணர்ந்து 2020ல் 'ஆர்ட்ஸ் பிஹைண்ட் பார்ஸ்' எனும் திட்­டம் சிறை­யில் உத­ய­மா­னது.

இந்­தத் திட்­டத்­தில் கைதி­கள் வாரத்­திற்கு இரண்­டி­லி­ருந்து மூன்று நாள்­கள் கலைச் சிகிச்சை அமர்­வு­களில் கலந்­து­கொள்­கின்­ற­னர். எழுத்­துக்­கலை, ஓவி­யம் வரை­வது போன்ற நட­வ­டிக்­கை­க­களில் ஈடு­படும் கைதி­கள் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் கற்­றுத்­த­ரும் பண்­பை­யும் வளர்த்­துக்­கொள்­கின்­ற­னர். ஐந்து கைதி­களில் தொடங்கி தற்­போது 40 கைதி­கள் இந்­தக் கலை சிகிச்சை மூலம் பயன் கண்­ட­தாக ராகினி கூறி­னார்.

பல­த­ரப்­பட்ட பின்­ன­ணி­க­ளி­லி­ருந்து வரும் பெண் சிறைக் கைதி­க­ளின் வாழ்க்­கை­யில் ஒரு மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி அவர்­கள் சிறை­யி­லிருந்து விடு­பட்­ட­வு­டன் மீண்­டும் சமு­தா­யத்­தில் ஒருங்­கி­ணைக்க தோள் கொடுக்­கி­றார் ராகினி. பெற்­றோர்­ இ­ரு­வ­ரும் முன்பு ராணு­வத்­தில் பணி­பு­ரிந்­ததைக் கண்டு வளர்ந்த ராகி­னிக்கு சீருடை அணிந்த வேலை­யில் பணி­பு­ரிய வேண்­டு­மென்ற கன­வுப் ­ப­ய­ணம் ஒன்­பது ஆண்டு

களுக்கு முன் தொடங்­கி­யது. போதைப் புழக்­கத்­திற்கு அடி­மை­யா­கிய சிறைக் கைதி­களை நல்­வ­ழிப்­ப­டுத்­தும் நோக்­கில் ஏற்­பாடு செய்­யப்­படும் மறு­வாழ்வு அமர்­வு­களை வழி­ந­டத்­து­வது இவ­ரின் தலை­யாய பொறுப்­பு­களில் ஒன்று.

கடு­மை­யான பயிற்­சி­களை மேற்­கொண்ட பின்­னரே இந்­தப் பதவியைப் பெற்ற ராகி­னிக்கு சவால்­கள் அவ்­வப்­போது குறுக்­கி­டு­வது இயல்­பாக உள்­ளது.

தனது கண­வ­ரும் சிறை­யில் முன்பு அதி­கா­ரி­யாக பணி­பு­ரிந்­த­வர் என்ற ராகினி, கண­வ­ரின் அய­ராத ஆத­ர­வால் இந்த உன்னத பணி­யில் தன்­னால் நிலைத்து நிற்க முடி­வ­தாக பகிர்ந்து­கொண்­டார்.

sanush@sph.com.sg