ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் 'நக்‌ஷத்ரா'

ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் 'நக்‌ஷத்ரா'

1 mins read
30856aae-bf45-4a1a-adc0-cdcbd3b608fd
-

சுதாஸகி ராமன்

நகைச்­சுவை, நடனம், நாடகம் போன்ற­வற்றை ஒன்­று­சேர்த்து 'நட்சத்ரா' கலை நிகழ்ச்­சி­யின் வழி பார்வை­யா­ளர்­களைக் கவ­ர­வி­ருக்­கிறது ரிபப்­ளிக் பலதுறை தொழிற்­கல்­லூ­ரி­யின் இந்திய கலாசார குழு. ஆண்­டு­தோ­றும் நடத்­தப்­படும் ''நக்‌ஷத்ரா', இவ்­வாண்டு ஏழாவது முறையாக நடத்­தப்­ப­ட­வுள்­ளது. எல்லா வய­தி­னரை­யும் கவ­ர­வுள்­ள­தாக அமை­ய­வி­ருக்­கும் இந்த நிகழ்ச்­சி­யில் நகைச்­சுவை­யு­டன் திகிலை­யும் முதல்­முறை­யாக புகுத்­தி­யுள்­ளது தயாரிப்புக் குழு.

அடுத்த மாதம் 6ஆம் தேதி ரி­பப்­ளிக் கலாசார அரங்­கில் பிற்பகல் 3 மணிக்கும் இரவு 7.30 மணிக்கும் இடம்பெற­வுள்ள இந்நிகழ்ச்­சிக்கு 'அபாயம்' எனப் பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. பல சவால்­களைத் தாண்டி கைவி­டப்­பட்ட ஒரு வீட்­டுக்­குள் நுழையப் போட்­டிப்போ­டும் இரு குழுக்­களைப் பற்றிய கதையை­கொண்­டி­ருக்­கும் இந்த நிகழ்ச்சி, மாண­வர்­கள் தங்க­ளது திறன் களை வெளிப்­படுத்­தும் தள­மா­கக் கரு­தப்­படு­கிறது.