50 ஆண்­டு­களில் தமி­ழும் தமி­ழர்­களும்

50 ஆண்­டு­களில் தமி­ழும் தமி­ழர்­களும்

1 mins read
1de35aba-6313-4b42-8a10-b951d507fed2
-

­­மா பிரெ­மிக்கா

தமிழ் மொழி விழாவை முன்­னிட்டு கடந்த சனிக்­கி­ழமை பல்­கலைக்­க­ழ­கப் புகு­முக வகுப்­பு­­­களுக்­கான 28 ஆம் 'தமிழ்­மொழி, இலக்­கி­­­யக் கருத்­த­ரங்கு 2016' யீ‌ஷூன் தொடக்­கக் கல்­லூரி அரங்­கில் நடை­பெற்­றது. 'அடுத்த 50ஆண்­டு­களில் - சிங்கை­யில் தமி­ழும் தமி­ழர்­களும்' என்­கிற கருப்­பொ­ருளைச் சார்ந்து இக்­க­ருத்­த­ரங்கை யீ‌ஷூன் தொடக்­கக் கல்­லூ­ரி­யின் இந்­திய கலா­சார மன்றம் நடத்­தி­யது. தொடக்­கக் கல்­லூரி மாண­­­வர்­கள், உயர்­நிலைப் பள்ளி மாண ­­­வர்­கள், தமிழ் ஆசி­ரி­யர்­கள், தமிழ் ஆர்­வ­லர்­கள் என கிட்­ட­தட்ட 150 பேர் இக்­க­ருத்­த­ரங்­­­கில் கலந்து கொண்ட­னர். சிறப்பு விருந்­தி­ன­ராக வருகை அளித்த முன்னாள் நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு ஆர் தின­க­ரன், "தமிழ் நமக்கு வாழ்வு அளிக்­குமா என்று கேட்­ப­தற்­குப் பதி­லாக, தமிழ் நமக்கு அளிக்­கக்­கூ­டிய கொள்கை­கள், பண்­பாடு, கலா­சா­ரம் ஆகி­ய­­­வற்றைப் பார்க்க வேண்­டும்," என்று கூறினார்.

யீ‌ஷூன் தொடக் கக் கல் லூரி அரங் கில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தமிழ் இலக்கிய கருத்தரங்கையொட்டி நடந்த 'நீங்கள் தயார் தானே?' என்கின்ற தலைப்பை யொட்டிய ஒரு கலந்துரையாடலை வழிநடத்துகிறார் ஜூரோங் தொடக்கக் கல்லூரியின் தமிழாசிரியர் திரு எஸ்.ஜெகதீசன்.