மரபுகளை விதைத்த தமிழ்த் திருவிழா

மரபுகளை விதைத்த தமிழ்த் திருவிழா

1 mins read
edbd1702-ac70-437f-b335-ca69b2a3ce6b
-

நித்திஷ் செந்தூர்

திரு­வி­ழாக்கோலம் பூண்­டி­ருந்தது உம­றுப்­பு­ல­வர் தமிழ்­மொழி நிலையம். பண்­பாட்­டுக் கூறு­களை­யும் மரபு சார்ந்த விஷ­யங்களை­யும் மாண­வர்­களி­டம் கொண்­டு­சேர்க்­கும் நோக்கில் இம்­மா­தம் 6ஆம் தேதி மாணவர் தமிழ்த் திரு­வி­ழாவை ஏற்பாடு செய்­தி­ருந்தது உமறுப்புலவர் தமிழ்­மொழி நிலையம். "மர­பு­கள் வழி மாண­வர்­கள் சில முக்கியமான கருத்­து­களை உணர்ந்து கொள்­ள­லாம்.

கோலாட்­டம் போன்ற குழு நட­வ­டிக்கை­களில் ஈடுபடுவதால் ஒருங்­கிணைந்து செயல்­படு­தல், குழு உணர்வு, மகிழ்ச்­சி­யா­கக் கொண்டா­டு­தல் போன்ற விழு­மி­யங்களை மாண­வர்­கள் கற்­றுக்­ கொள்­ள­லாம்," என்று உம­றுப் ­ பு­ல­வர் தமிழ்­மொழி நிலை­யத் ­தின் இயக்­கு­நர் அன்­ப­ரசு ராஜேந்­தி­ரன் கூறினார். பண்­பாட்டு நட­வ­டிக்கை­களு­டன் 'ஏகேடி கிரி­யே­ஷன்ஸ்' படைத்த கிராமிய மணம் கமழும் பாரம்ப­ரிய கலை நிகழ்ச்சி ஒன்றை­யும் மாண­வர்­கள் கண்டு ரசித்­த­னர்.

ஞானசேகரன் லெபக்சி (நடுவில்) கல்வி அமைச்­சின் தாய்­மொ­ழி­கள் பிரிவு இயக்­கு­நர் திரு பாங் சூன் ஹவ்விடமிருந்து உன்னத மாணவருக்கான விருதைப் பெற்றுக்கொண்டார். உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய இயக்குநர் அன்பரசு ராஜேந்திரன் (இடக்கோடி) உடனிருந்தார். படங்கள்: உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம்