'தனித்துவம் வாய்ந்த சிங்கப்பூர்; நமது அடுத்த 50 ஆண்டுகள்' கருத்தரங்கு

'தனித்துவம் வாய்ந்த சிங்கப்பூர்; நமது அடுத்த 50 ஆண்டுகள்' கருத்தரங்கு

1 mins read
44602d0f-7508-4cc4-b9fc-07c92ce815f0
-

முஹம்­மது ஃபைரோஸ்

சுதந்­தி­ரம் பெற்று இரண்டா­வது அரை நூற்­றாண்­டில் அடி­யெ­டுத்து வைத்­துள்ள சிங்கப்­பூர் நடந்து செல்ல வேண்டிய அடுத்த 50 ஆண்டுப் பய­ணத்­துக்­கான பாதை, சந்­திக்கவேண்டிய சவால்­கள், எட்­ட­வேண்­டிய வளர்ச்சி ஆகி­ய­வற்றைப் பற்றி இளை­யர்­களிடையே எடுத்­துரைக்­கப்­பட்­டது. 'தனித்­து­வம் வாய்ந்த சிங்கப்­பூர்' எனும் கருப்­பொ­ருளை நோக்கிய பய­ணத்­தில் 'தனித்­து­வம் வாய்ந்த அனைத்­து­லக நகரம்', 'அனை­வ­ருக்­கும் சிறந்த இல்லம்', 'தோட்­டத்­தில் ஒரு நகரம்' போன்ற அம்­சங்களை உள்­ள­டக்­கு­வ­தில் தாங்கள் எந்­தெந்த வகையில் பங்களிப்­பது என்பது நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட இளை­யர்­களின் முக்கிய சிந்தனை­யாக இருந்தது.

சிங்கப்­பூர் தேசியப் பல்­கலைக்­க­ழ­கத்­தில் (என்­யு­எஸ்) கடந்த வியா­ழக்­கிழமை­ நடை­பெற்ற 'கெண்ட் ரிட்ஜ்' அமைச்­சர்­நிலைக் கருத்­த­ரங்­கில் கலந்­து­கொண்ட தேசிய வளர்ச்சி அமைச்­சர் லாரன்ஸ் வோங் மேற்­கூ­றப்­பட்ட விவ­கா­ரங்கள் குறித்து கிட்­டத்­தட்ட 170 மாண­வர்­கள் முன் வெளிப்­படை­யா­கப் பேசினார். பின்னர் நடை­பெற்ற கேள்வி பதில் அங்கத்­தில் ஒருமணி நேரத்­துக்­கு­மேல் மாண­வர்­களின் பல ­த­ரப்­பட்ட கேள்­வி­களுக்கு அமைச்­சர் சளைக்காமல் பதி­ல­ளித்­தார்.

கலந்துரையாடலில் பங்கேற்ற மாணவர்கள் (இடமிருந்து) திலீப் குமார், ஆர்.பிரசாந்தி, கன்னா அனீஷா மோனிஷ், நந்தினி ஆகியோருடன் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் (வலக்கோடி) உரையாடினார். படம்: தேசிய வளர்ச்சி அமைச்சு