மலையேற்றம், நெடுந்தூர நடை போன்ற சாகசப் பயணங்களிலும் ஈடுபாடு காட்டும் திலகன் நாராயணசாமி (இடது) கடந்த செப்டம்பர் மாதம் நண்பர்களுடன் சேர்ந்து இந்தோனீசியாவின் ரிஞ்சானி மலையுச்சிக்குச் சென்று திரும்பியுள்ளார். ஒரு சமயம் பாலிக்குச் சென்றிருந்த 23 வயது திலகன், விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது தம்மை சில உள்ளூர்வாசிகள் பின் தொடர்வதாகச் சந்தேகப்பட்டார். விடுதிக்குச் செல்லும் வழியை உறுதிசெய்துகொள்ள அருகில் இருந்த கடை ஒன்றில் விசாரிக்க எண்ணி நின்றார் திலகன். அவரைத் தொடர்ந்து வந்த அந்த சிலரும் அங்கு நின்றது அவரது சந்தேகத்தை உறுதிப்படுத்தியது. படம்: திலகன் நாராயணசாமி
பிரச்சினையிலிருந்து விடுபட நிதானமே உதவியது
1 mins read
-

