வளமான வருங்காலத்தை திடமாக்கிய தேசிய சேவை

வளமான வருங்காலத்தை திடமாக்கிய தேசிய சேவை

1 mins read
839c843e-6b49-4441-8f3a-8dab8040bb3d
-

பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பட்டக்கல்வியை மேற் கொள்ள விரும்பிய சித்தார்த்தரன் முத்துவுக்கு 'ஏ' நிலைத் தேர்வில் போதிய மதிப்பெண்கள் கிடைக்க வில்லை. தங்கையும் உயர்கல்வி பயிலும் பருவத்தை அடைந்த நிலையில், தந்தை ஒருவரே குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவராக இருந்த தால் வெளிநாடு சென்று படிக்கும் சாத்தியமும் இருக்கவில்லை. செய்வதறியாது சித்தார்த்தரன் மனக் குழப்பத்தில் ஆழ்ந்தார். அச்சமயத்தில் தேசிய சேவையில் ராணுவ போலிஸ் பிரிவில் அவர் பெற்ற அனுபவம் அவருக்கு வழி காட்டியது. "வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத் தில் இருந்த எனக்கு தேசிய சேவை ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது. வருங்காலம் குறித்த என் பார்வையை மாற்றியது," என்றார் சித்தார்த்தரன்.

படம்: தெமசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி

மேலும் செய்திகள்