நாட்டின் எதிர்காலப் பயணத்தில் வாய்ப்புகளும் சவால்களும்

நாட்டின் எதிர்காலப் பயணத்தில் வாய்ப்புகளும் சவால்களும்

1 mins read
8641fe8b-ab9a-41dd-8921-1da059ee1ad3
-

ருபனேஸ்வரன்

ஞானசுப்ரமணியம்

'நமது சிங்கப்பூரை உருமாற்றுதல்' என்று பொருள்படக்கூடிய 'டிரான்ஸ்ஃபார்மிங் அவர் எஸ்ஜி' என்ற கருப்பொருளோடு நடத் தப்பட்ட இந்த ஆண்டின் பல் கலைக்கழகப் புகுமுக மாநாடு, சிங்கப்பூரின் அடுத்தகட்ட வளர்ச்சியில் இருக்கும் வாய்ப்பு களையும் சவால்களையும் பற்றிய விழிப்புணர்வை மாணவர் களிடையே உண்டாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. கல்வி அமைச்சும் ரிவர்வேல் உயர்நிலைப்பள்ளியும் இணைந்து ஏற்பாடு செய்த அந்த மாநாட்டில், 550க்கும் மேற்பட்ட மேல்நிலைக் கல்லூரி மாணவர்கள் பங் கேற்றனர். ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு கல்லூரிகளிலிருந்து பங்கேற்கும் மாணவர்களை ஒன்றிணைப்ப தோடு சிங்கப்பூரின் வளர்ச்சி தொடர்பான முக்கிய தகவல்களைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்வதற்கும் இந்த மாநாடு பயனுள்ள ஒரு தளமாக இருந்து வருகிறது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற பல்கலைக்கழகப் புகுமுக மாநாட்டில் ஐநூறுக்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். படம்: சாவ் பாவ்