ரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா

ரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா

1 mins read
1a71110a-a7ee-4a4c-9053-5a5f5004d279
'மொமெண்டம்' நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன் -

ரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி 'மொமெண்டம்' என்ற நாட்டிய விழாவை மே மாதம் 25, 26 தேதிகளில் மேடையேற்றியது.

விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரியிலிருந்தும் மற்ற கல்வி நிலையங்களிலிருந் தும் 13 குழுக்கள் பங்கேற்று பல் வேறு நடனங்களைப் படைத்தன.

பெரும்பாலான குழுக்கள் படைத்த மேற்கத்திய நடனங் களுக்கிடையே ரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த பரதநாட்டியம் பார்வை யாளர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை வழங்கியது.

ரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரியின் இந்திய கலாசாரக் குழு 'த்வய்ட்டா' என்ற நாட்டியப் படைப்பை மேடையேற்றியது.

சூரியனுக்கும் கடலுக்கும் இடையே நிகழும் உரையாடலைப் பற்றியதாக இந்த நடனத்தை திரு வெற்றிவேலன் குணசேகரன், குமாரி கவிதா கிரு‌ஷ்ணன் ஆகிய இருவரும் வடிவமைத்திருந் தனர். நடனத்தில் பங்கேற்றவர் களில் 11 நடனமணிகள் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரியின் இந்திய கலாசாரக் குழுவைச் சேர்ந்தவர்கள். மூவர் மாயா நடனக் குழுவைச் சேர்ந்தவர்கள்.

நடனக் குழுவின் தலைவரான 19 வயது ஜீவனா ரவிச்சந்திரன், "இந்தக் கருப்பொருளில் நடனம் அமைத்து ஆடுவது எங்களில் பலருக்கு புதிய அனுபவமாக இருந்தது," என்றார்.

ஜீவனா, ரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரியின் மருந்து அறிவியல் பட்டயக் கல்வியில் இரண்டாம் ஆண்டு பயில்கிறார். படிப்பினூடே, ஐந்து மாத பயிற்சி கடுமையானதாக இருந்ததாகக் கூறிய அவர், அனைவரும் ஒரு வருக்கொருவர் ஊக்கமளித்து, நடனத்தை வெற்றிகரமாகப் படைத்ததாகக் கூறினார்.