வகுப்பறையில் வேலையிட சூழலை உருவாக்கும் தொழில்நுட்பம்

வகுப்பறையில் வேலையிட சூழலை உருவாக்கும் தொழில்நுட்பம்

2 mins read
fa59e6a5-c7b0-47de-a57c-f19bf311bacd
-

மெய்­நி­கர் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­திக் கற்­கும் 19 வயது தொழிற்­கல்­விக் கழக மாணவி ஷபிரா அக­மது கனி (படம்), இத­னால் பாடங்­கள் சுவை­யா­க­வும் மேலும் பய­ன­ளிக்­கக்­கூ­டிய விதத்­தில் இருப்­ப­தா­க­வும் தெரி­வித்­தார்.

கடந்­தாண்டு சிங்­கப்­பூ­ரின் பல்­வேறு கல்வி நிலை­யங்­களில் மெய்­நி­கர் தொழில்­நுட்­பம் அறி­மு­கம் செய்­யப்­பட்­டது. இதன் மூலம் ரசா­யன பத­னீட்டு ஆலை­யில் கரு­வி­க­ளைப் பயன்­ப­டுத்­தும் உணர்வை ஷபிரா போன்ற மாண­வர்­கள் வகுப்­பில் இருந்­த­வாறே பெற முடி­கிறது.

ஆரம்­பத்­தில் தாதி­யர் படிப்­பில் சேர விரும்­பிய ஷபிரா, தமது நண்­ப­ரின் மூலம் இந்­தப் பயிற்­சித் திட்­டத்­தைப் பற்றி கேள்­விப்­பட்ட பிறகு ரசா­ய­னத் துறை­யில் படிக்க முடிவு செய்­த­தா­கத் தெரி­வித்­தார். ஜன­வரி தொடக்­கத்­தி­லேயே தொடங்­கிய தம் கற்­றல் பய­ணத்­தின் மூன்­றா­வது வாரத்­தி­லேயே இந்­தத் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­தி­ய­தாக அவர் கூறி­னார். புத்­த­கங்­க­ளின் வழி­யாக மட்­டும் கற்­கா­மல் எதிர்­கால வேலை­யி­டச் சூழலை இத்­தொ­ழில்­நுட்­பம் வகுப்­ப­றை­யி­லேயே பெறச் செய்­தது சுவா­ர­சி­ய­மான அனு­ப­வம் என்­றார் ஷபிரா.

"நான் ரசா­யன ஆலைக்கு சென்­ற­தில்லை. அங்கு என்­னென்ன கரு­வி­கள் உள்­ளன, அவை எதற்­கா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன, அவற்றை முறை­யாக இயக்­கு­வது எப்­படி என்­பதை இந்த வகுப்பு, 'ஏஆர்/விஆர்' தொழில்­நுட்­பம் வழி­யா­கக் காட்­டு­கிறது.

"இனி­மேல் நேர­டி­யாக ஆலைக்­குச் சென்­றா­லும் அது எனக்கு ஒன்­றும் புதி­தல்ல," என்று அவர் கூறி­னார். ரசா­ய­னப் பத­னீட்­டுக் கரு­வி­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தில் அபா­யங்­கள் இருப்­ப­தால் அத­னைப் பயன்­ப­டுத்­தக் கற்­கத் தொடங்­கு­ப­வர் நெருக்­க­டி­யான சூழ­லில் முழுக் கவ­னத்­து­டன் இயங்­கப் பழ­கிக்­கொள்ள வேண்­டும். ஆனால் மெய்­நி­கர் ­தொ­ழில்­நுட்­பச் சூழ­லில் இத்­த­கைய நெருக்­க­டி­கள் இல்லை என்று இந்த மாணவி கூறு­கி­றார். "ஆர்­வ­மூட்­டும் ஒரு காணொளி விளை­யாட்டு போல இருந்­தது," என்­றார் ஷபிரா. தற்­போது நில­வும் கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லால் வீட்­டில் இந்த வச­தி­யைப் பயன்­ப­டுத்­தத் தம்­மால் இய­ல­வில்லை. இணை­யத்­தின்­வ­ழி­யாக நடத்­தப்­படும் வகுப்­பு­கள் தொடர்­வ­தா­கக் கூறிய ஷபிரா, மீண்­டும் மெய்­நி­கர் தொ­ழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­து­வ­தற்­குப் பள்­ளிக்­குச் செல்ல ஆவ­லாக இருப்பதாகக் கூறி­னார். பக்­கத்­தில் ஆசி­ரி­யர்­கள் இன்றி தற்­போது வீட்­டிலேயே கற்­றுக்­கொள்­வ­தால் பாடங்­க­ளைப் புரிந்து­கொள்­வ­தற்கு ஆரம்­பத்­தில் சற்று சிர­மத்தை எதிர்­நோக்­கி­ய­தாக வெளிப்­ப­டை­யா­கக் கூறு கிறார். ஷபிரா, வருங்­கா­லத்­தில் ரசா­ய­னப் பொறி­யா­ள­ராக விரும்­பு­வ­தா­கக் கூறி­னார்.