இணையத்தில் விருந்தளிக்கும் கலைஞர்கள்

இணையத்தில் விருந்தளிக்கும் கலைஞர்கள்

2 mins read
b8537761-0cf9-489f-9018-e2cd474982d2
'டீஜே எஷர்' என்­னும் அஷ்­விந்­தர் சிங் -
multi-img1 of 2

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­கள் நடப்­பில் உள்ள நிலை­யில் தங்­கள் நண்­பர்­க­ளைச் சந்­தித்­துக் கேளிக்­கை ­கூ­டங்­க­ளுக்­கு சென்று பாடல்­களை ரசிக்க முடி­யா­மல் தவிக்­கின்­ற­னர் சில இளை­யர்­கள். இவர்­களை மகிழ்­விப்­ப­தை தம் கட­மை­யா­கக் கொண்டு செயல்­பட்டு வரு­கி­றார் 'டீஜே எஷர்' என்­னும் அஷ்­விந்­தர் சிங். இளை­யர்­கள் இவ­ரது இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­திற்­குச் சென்று தங்­க­ளுக்கு விருப்­ப­மான பாடல்­க­ளைக் கேட்டு மகிழ்­வ­து­டன் இவ­ரின் உற்­சா­க­ம­ளிக்­கும் இசைத்­தொ­குப்­பை­யும் கேட்டு ரசிக்­கின்­ற­னர். அஷ்­வின், நேரலை வழி­யா­கப் பாடல்­களை இசைப்­பது மட்­டு­மின்றி தன்­னு­டன் இணைந்­தி­ருக்­கும் இஸ்­ட­கி­ராம் இணை­ய­வா­சி­க­ளு­டன் உரை­யா­டி­யும் மகிழ்­கி­றார்.

இவ்­வாறு அனை­வ­ரும் ஒன்­று­கூ­டு­வது போன்ற சூழல் உரு­வா­கிறது. ஒரு­வ­ரோடு ஒரு­வர் உரை­யா­டு­வ­தா­லும் பாட்டை ரசிப்­ப­தா­லும் அனை­வ­ரின் தனிமை உணர்வு குறை­வ­தாக அஷ்­வின் கூறி­னார்.

"அர­சாங்­கக் கட்­டுப்­பா­டு­க­ளைப் பற்றி அதி­ருப்தி வெளிப்­ப­டுத்­து­வற்­கான நேரம் இது­வல்ல. நோய்ப்­ ப­ர­வலை முறி­ய­டிக்க அர­சாங்­கம் கடு­மை­யா­கப் போரா­டு­கிறது. வீட்­டில் பாது­காப்­பு­டன் இருப்­பது நாம் ஆற்­றக்­கூ­டிய குறைந்­த­பட்ச பங்கு என்­பதை இளை­யர்­க­ளுக்­குச் சொல்ல விரும்­பு­கி­றேன்," என்­றார் அவர்.

"நாம் சிறு பிள்­ளை­க­ளாக இருந்­த­போது, சொற்­ப­மான விளை­யாட்­டுப் பொருட்­க­ளைக் கொண்டு உல்­லா­ச­மா­கப் பொழு­தைக் கழித்­தோம். அது­போ­லவே விரக்­தி­ய­டை­யா­மல் வீட்­டில் இருக்­கக்­கூ­டி­ய­வற்­றைப் பயன்­ப­டுத்தி நாம் நம்மை மகிழ்­வித்­துக்­கொள்ள வேண்­டும்," என்­றார்.

தனது பணிக்­கா­கப் பலர் சமூக ஊட­கங்­க­ளின் வாயி­லா­கத் தெரி­விக்­கும் பாராட்­டு­கள் இதைத் தொடர்ந்து செய்ய தனக்கு ஊக்­க­ம­ளிப்­ப­தாக அவர் சொன்­னார். தற்­போது கலைப்­பள்ளி ஒன்­றின் நிர்­வா­கி­யா­கப் பணி­பு­ரி­யும் அஷ்­வின், கிட்­டத்­தட்ட 20 ஆண்­டு­க­ளாக இதைப் பொழு­து­போக்­கிற்­காக செய்து வரு­கி­றார். அஷ்­வின் இளை­யர் செவி­க­ளுக்கு இசை விருந்து படைக்க, 'அப்­ச­ராஸ் ஆர்ட்ஸ் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு மற்­றும் முன்­னிலை ஊழி­யர்­க­ளுக்­காக ஒரு நட­னப் படைப்பை அர்ப்­ப­ணித்­துள்­ளது.

அதில் குழ­லோ­சைக்கு ஏற்ப நான்கு நட­ன­ம­ணி­கள் ஆடியவாறு தங்­க­ளின் ஆரோக்­கி­யத்­திற்­குக் கார­ண­மா­ன­வர்­க­ளுக்கு நன்றி தெரி­வித்­துள்­ள­னர். அத்­து­டன் உடல்­ந­ல­மில்­லா­த­வர்­கள் குண­ம­டைந்­து­விட வேண்­டும் என்­றும் தங்­கள் நட­னப் படைப்­பில் காட்­டி­யுள்­ள­னர். இந்­ந­டன நிறு­வ­னம் அதன் யூடி­யூப் பக்­கத்­தில் மேலும் பல காணொ­ளி­க­ளைப் பதி­வேற்­றம் செய்­துள்­ளது. அவற்றை வீட்­டில் இருந்­த­வாறு நீங்­கள் கண்டு ரசிக்­க­லாமே!

கூடு­தல் செய்தி: கி. ஜனார்த்­த­னன்