மக்களின் வருகையால் மகிழும் யானை பராமரிப்பாளர்

3 mins read
444a075b-9276-4ca5-88d5-230297297b81
அடுத்த சில மாதங்களில் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் யானைகள் தொடர்பான மேலும் பல நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாக கூறினார் யானை பராமரிப்பாளர் உதயகுமார் காளிரத்னம்.படம்: சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகம் -

சிங்­கப்­பூர் விலங்­கி­யல் தோட்­டம் கடந்த ஜூலை 7ஆம் தேதி­யி­லி­ருந்து வரு­கை­யா­ளர்களுக்­குத் தனது கத­வைத் திறந்­தது.

அன்றி­லி­ருந்து உள்­ளூர் வரு­கை­யா­ளர்­கள் தொடர்ந்து வந்து ஆத­ரிப்­ப­தைக் கண்டு உள்­ளம் குளிர்­வ­தாக சிங்­கப்­பூர் விலங்­கி­யல் தோட்­டத்­தில் யானை பராமரிப்பாளராகப் பணி­பு­ரி­யும் உத­ய­கு­மார் காளி­ரத்­னம் தெரி­வித்­தி­ருக்­கி­றார். இரண்­டாம் தளர்வு கட்ட நட­வ­டிக்­கை­யின்­போது மக்­கள் விலங்­கி­யல் தோட்­டத்­திற்கு வரு­வார்­களா என்­பது குறித்து ஆரம்­பத்­தில் கவ­லைப்­பட்­ட­தாக 35 வயது உதயகுமார் தெரி­வித்­தார்.

"விலங்­கி­யல் தோட்­டத்­தில் 25 விழுக்­காடு பகுதி மட்­டுமே செயல்­ப­டு­கிறது. இருந்­த­போ­தும் உள்­ளூர்வாசிகள் தொடர்ந்து வரு­கின்­ற­னர். இவர்­க­ளது வாழ்க்­கையில் விலங்­கி­யல் தோட்­டம் முக்­கிய அங்­கம் வகிப்­பதை இது காட்­டு­கிறது," என்றார் ­உதயகுமார். சிங்­கப்­பூர் விலங்­கி­யல் தோட்­டத்­தில் கிட்­டத்­தட்ட ஆறு ஆண்டுக­ளா­கப் பணி­யாற்­றி வரும் உதயகுமார், தமது வேலை நேரத்­தின் பெரும்­பகுதியை யானை­க­ளைப் பரா­ம­ரிப்பதில் செலவழிக்கிறார்.

"சிங்­கப்­பூர் விலங்­கி­யல் தோட்­டத்­தில் நான் ஐந்து பெண் யானை­க­ளைப் பரா­ம­ரித்து வரு­கி­றேன். இலங்கையிலிருந்து வந்த யானை­யான 50 வயது 'கோமளி', மலே­சியாவிலிருந்து வந்த யானை­க­ளான 36 வயது 'ஜத்தி' மற்­றும் 31 வயது 'கம்­பீர்', சுமத்­ரா­வைச் சேர்ந்த 25 வயது 'இந்தான்' மற்­றும் 'அப்­ரில்லா' ஆகிய இரண்டு யானை­கள் தற்­போது என் பரா­ம­ரிப்­பில் உள்­ளன," என்று மது­ரை­யைச் சேர்ந்த உத­ய­கு­மார் கூறி­னார்.

விலங்­கி­யல் துறை­யில் பட்­டம் பெற்­றுள்ள உத­ய­கு­மார், வர்த்­தக நிறு­வ­னங்­களில் வேலை செய்த பின்­னர் சிங்­கப்­பூ­ரில்­தான் முதன்­மு­றை­யாக விலங்­கி­யல் தோட்­டம் ஒன்­றில் பணி­யாற்று

கிறார். குரங்­கு­கள், காண்டா மிரு­கங்­கள், வெள்­ளைப் புலி­கள் ஆகி­ய­வற்­றை­யும் அவர் அவ்­வப்­போது பரா­ம­ரித்து வரு­கி­றார். ஆனால் யானை­க­ளின் மென்மை, அன்பு, பரிவு போன்ற குணங்­கள் தனித்­தன்மை வாய்ந்­தவை என்று உதய குமார் கூறி­னார். மனி­தர்­க­ளைப் போலவே ஒவ்­வொரு யானைக்­கும் தனித்துவமான குணாதிசயங்கள் உள்­ள­தாம்.

"காட்டு யானை­க­ளாக இருந்­தா­லும் மனி­தர்­க­ளால் வளர்க்­கப்­பட்ட யானை­க­ளாக இருந்­தா­லும் அவற்­றுக்கு அதிக புத்­தி­க்கூர்­மை­யும் பல்­வேறு சூழ­லுக்கு மாறும் தன்­மை­யும் உள்­ளன," என்று அவர் கூறி­னார். இவற்­றுக்­கும் மேலாக, யானை­கள் மனி­தர்­க­ளின் மீது நம்­பிக்கை வைக்க முடிவு செய்­தால் அந்த நம்­பிக்கை மிக ஆழ­மாக இருக்­கும் என்­றும் உத­ய­கு­மார் தெரி­வித்­தார். கடந்த மே மாதம் கேர­ளா­வில் வெடி­பொ­ருட்­கள் நிரப்­பப்­பட்ட அன்­னா­சிப்­ப­ழத்தை உண்ட பிறகு வாயில் கடு­மை­யா­கக் காய­ம­டைந்து உயி­ரி­ழந்த யானை குறித்­தும் தமிழ் முரசு உத­ய­கு­மா­ரைக் கேட்­டது. பயிர்­க­ளைப் பாது­காக்க செயல்­படும் மனி­தர்­க­ளுக்­கும் பசி­யைப் போக்க அவற்­றைப் புசிக்க விரும்­பும் விலங்­கு­க­ளுக்­கும் இடை­யி­லான போராட்­டத்தை உணர்வதா­கக் கூறிய உத­ய­கு­மார், இதற்கு அர­சாங்­கத்­தின் பங்­க­ளிப்பு முக்­கி­யம் எனக் கரு­து­கி­றார்.

"அர­சாங்­கம் மீதான நம்­பிக்கை வலு­வாக இருந்­தால் மக்­கள் தங்­க­ளைப் பாது­காத்­துக்­கொள்ள விலங்குகளுக்கு எதி­ரான இத்­த­கைய நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­மாட்­டார்கள் என நம்­பு­கி­றேன்," என்று அவர் சொன்னார்.

இந்­தோ­னீ­சி­யா­வின் கம்­பாஸ் தேசிய பூங்­கா­வின் யானை பாது­காப்­புப் படையை சிங்­கப்­பூர் வன­வி­லங்­குக் காப்­ப­கம் ஆத­ரிப்­ப­தாக உத­ய­கு­மார் குறிப்­பிட்­டார்.

"இந்­தப் படை­யைச் சேர்ந்த வனத்­துறை நிபு­ணர்­களும் பயிற்சி அளிக்­கப்­பட்ட யானை­களும் அங்­குள்ள காட்­டுப்­ப­கு­தி­க­ளை­யும் விளை­நி­லங்­க­ளை­யும் கண்­கா­ணித்து வரு­கின்­றன. வன­வி­லங்கு களைப் பாது­காக்க சமூ­கங்­கள் எப்­படி இணை­கின்­றன என்­ப­தற்கு அது சிறந்த உதா­ர­ணம்," என்று உத­ய­கு­மார் தெரி­வித்­தார்.

பாது­காப்பு இடை­வெளி விதி­மு­றை­க­ளின் அங்­க­மாக யானை தொடர்­பான நிகழ்ச்­சி­களும் அவற்­றுக்­குத் உணவு வழங்கும் அங்­கங்­களும் தற்­கா­லி­க­மாக ரத்து செய்­யப்­பட்­டுள்­ளன. அத்­து­டன், யானை­

க­ளுக்­கும் அவற்­றைப் பரா­ம­ரிப்­போ­ருக்­கும் இடையே இடை­வெ­ளி­யைப் நடைமுறைப்படுத்துவதற்கு தடுப்பு ­க­ளுக்­கும் போடப்பட்டுள்ளன.

விலங்­கு­க­ளின் நல­னை­யும் பாது­காப்­பை­யும் மேம்­ப­டுத்­தும் அதே வேளை­யில் அடுத்த சில மாதங்­களில் யானை­கள் தொடர்­பான மேலும் பல நட­வ­டிக்­கை­களை எதிர் பார்ப்­ப­தாக உத­ய­கு­மார் கூறி­னார்.