'அனைவரையும் அரவணைத்தால் தமிழ்மொழி வளரும்'

'அனைவரையும் அரவணைத்தால் தமிழ்மொழி வளரும்'

3 mins read
a9173fad-82aa-4298-bb0c-128f0590141a
கலைவாணி இளங்கோ. கல்வியாளர். -

வாள்­மு­னை­யை­விட பேனா முனை கூர்மையானது என்­ப­தால் அதனை ஆயு­த­மா­கப் பயன்­ப­டுத்தி இளை­யர் மன­தில் புதுமைக் கீறல்­களை ஏற்­படுத்த முனை­ப­வர் கலை­வாணி இளங்கோ, 35. தமிழ் மொழித்­தி­றன் குறை­வாக உள்­ள­வர்­களை ஈடு­படுத்தி சிங்­கப்­பூ­ரில் நல்ல தமிழ் வாச­கர் சமூ­கத்தை உரு­வாக்­க­லாம் என்று இவர் கூறி­னார்.

புதிய சமூக ஊட­கத் தளங்­களின் மூலம் தமிழ் நட­வ­டிக்­கை­களில் புத்­தாக்­க­மும் புதுப்­பொ­லி­வும் அறி­மு­கம் செய்­யப்­பட்டு வரு­கின்­றன. இருந்­த­போ­தும் மொழித்­திறமை அதி­கம் உள்ள அல்­லது ஈடு­பாடு உள்ள குறு­கிய வட்­டத்­திற்கு வெளி­யி­லும் தமிழ் நட­வடிக்­கை­கள் விரி­வுப்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்­கி­றார் அவர். ஐந்து ஆண்டு­கள் உயர்­நி­லைப்­பள்ளி, மூன்று ஆண்­டு­கள் தொடக்­கக் கல்­லூரி ஆகி­ய­வற்­றில் தமிழ் ஆசி­ரி­ய­ராக இருந்த இவர், கல்­வி­யமைச்­சின் பாடக்­க­லைத் திட்­ட வரைவு மேம்பாட்டுப் பிரி­வில் பணி­யாற்­று­கி­றார். இளம் பருவ வாழ்க்கை முதல் தமிழ் மொழி இவ­ரது உணர்­வி­லும் சிந்­தை­யி­லும் கலந்­தி­ருந்­த­தற்கு தமி­ழா­சி­ரி­யர்­க­ளாக பணி­புரி­யும் இவ­ரது பெற்­றோ­ரும் கற்­றுத்­தந்த ஒவ்­வொரு தமிழ் ஆசி­ரி­ய­ரும் கொடுத்த ஊக்­கமே கார­ணம் என்­றார் தமிழ்த்­து­றை­யில் பட்­ட­தா­ரி­யான இவர்.

"தொடக்­கப்­பள்ளி ஐந்­தில் நான் நையாண்டி கவிதை ஒன்றை எழுதி­னேன். அங்­கி­ருந்­து­தான் கட்­டுரை, கவிதை, நாட­கங்­கள் போன்­ற­வற்றை எழு­தத் தொடங்­கி­னேன்," என்று அவர் கூறி­னார்.

பத்து ஆண்­டு­கள் தோ பாயோ ஆங்­கி­லப் பேச்­சா­ளர் மன்­றத்­தில் இருந்து பின்­னர் மூன்று ஆண்­டு ­க­ளுக்கு முன்­னர் லிஷா தமிழ் மன்ற பேச்­சா­ள­ரா­கச் சேர்ந்­தார். 2019ஆம் ஆண்டு மன்­றத்­தின் துணைத்­த­லை­வ­ராக இருந்து கடந்­தாண்டு தலை­வ­ராக பொறுப்­பேற்­றார். பட்­டுக்­கோட்­டை­யா­ரின் மக்­கள் கவி­ஞர் மன்­றத்­தி­லும் செட்டி மலாக்கா மன்­றத்­தி­லும் உறுப்­பி­ன­ராக இருக்­கி­றார்.

தமது ஆசி­ரி­யர் திரு பொன். சுந்­த­ர­ராசு பகுதி நேர­மாக தொலைக்­காட்­சி­யில் செய்தி வாசிப்­ப­தைக் காணும்­போது அவ­ரைப் போல தாமும் சமூ­கத்­தில் நல்ல அங்­கீ­கா­ரம் பெற்ற நிலை­யில் இருக்­க­வேண்­டும் என ஆசைப்­பட்­ட­தாக இவர் கூறி­னார். பட்­டுக்­கோட்டை கல்­யா­ண­சுந்­த­ரம், கவி­ய­ரசு கண்­ண­தா­சன், பார­தி­தா­சன் உள்­ளிட்ட தமிழ் கவி­ஞர்­க­ளின் படைப்­பு­களும் தமக்கு உற்­சா­கத்­தைக் கொடுத்­த தா­கக் கூறு­கி­றார் கலை­வாணி.

"நடி­கர் அஜித்­கு­மா­ரும் எனக்கு மற்­றொரு முன்­னு­தா­ர­ணம். அவ­ரி­டம் விடா­மு­யற்சி, மீள்­தி­றன் போன்ற பண்­பு­களை நான் காண்­கி­றேன். மொழித் திற­மையை வளர்ப்­ப­தற்கு இப்­பண்­பு­களும் முக்­கி­யம்," என்று அவர் தெரி­வித்­தார்.

எழுத்­துக் கலை­ஞர்­கள் பல்­வேறு சவால்­க­ளை­யும் விமர்­ச­னங்­க­ளை­யும் எதிர்­கொள்­ள­வேண்­டும் என்­பதைக் குறிப்­பிட்­டார்.

"எனது முன்­னாள் மாண­வர்­கள் உள்­ளிட்ட இளை­யர்­கள் தமி­ழு­டன் இணைந்து அவர்­களும் படைப்­பு­களை உரு­வாக்க வேண்­டும் என்­ப­தற்­கா­க­வும் நான் தொடர்ச்­சி­யாக செயல்­பட்டு வரு­கி­றேன்," என்று அவர் கூறு­கி­றார். கடந்­தாண்டு கண்­ண­தா­சன் விரு­தைப் பெற்­றார். சென்­னை­யினல் உள்ள நந்­த­வ­னம் அறக்­கட்­டளை நிறு­வ­னத்­தின் மக­ளிர் தினத்­திற்­கான பெண் சாத­னை­யா­ளர் விரு­தும் இவ­ருக்கு வழங்­கப்­பட்­டது. கண்­ண­தா­ச­னின் பேரில் விருது பெற்­றது குறித்து பெரு­மி­தம் கொள்­வ­தா­கக் குறிப்­பிட்ட குமாரி கலை­வாணி, பன்­முகத்­தன்­மை­யைப் பொறுத்­த­வரை அம­ரர் கண்­ண­தா­சன் சிறந்த உதா­ர­ண­மாக இருப்­ப­தா­கக் கூறு­கி­றார்.

"கதை, கட்­டுரை, நாட­கங்­கள், நடிப்பு, ஐந்து குரல்­க­ளின் பாவனை, பட்­டி­மன்­றம் போன்ற பல்­வேறு துறை­களில் திறன்­களை வளர்த்­துக்­கொள்ள முயற்சி செய்­கி­றேன்," என்­றார் குமாரி கலை­வாணி.

தற்­போ­தைய கிரு­மிப்­ப­ர­வல் சூழ­லி­லும் தர­மான தமிழ் நிகழ்ச்­சி­கள் மெய்­நி­கர் வடி­வில் அடுக்­க­டுக்­காக சிங்­கப்­பூ­ரில் ஏற்­பாடு செய்­யப்­பட்டு வரு­வது இங்கு தமிழ்மொழி அடைந்­தி­ருக்­கும் நல்ல நிலையை எடுத்­துக்­காட்­டு­வ­தாக கலை­வாணி தெரி­வித்­தார். 'டிக்­டாக்', 'ஸ்ட்­ரீம்­யார்ட்' போன்ற தளங்­க­ளுக்­கேற்ப தமிழ்ப் படைப்­பு­களும் மாறி­வரு­வது தற்­போது நடக்­கும் ஒரு நன்மை என்று அவர் குறிப்­பிட்­டார்.

இருந்­த­போ­தும் தமி­ழு­டன் அதி­கம் தொடர்­பில்­லா­தோரை மொழி­யைக் கொண்டு சேர்க்­கும் முயற்சி­கள் மேலும் தீவி­ர­மா­க­வேண்­டும் என்று கலை­வாணி கரு­து­கி­றார். இளம் பெற்­றோர்­கள் தமி­ழு­ட­னான தொடர்பை விட்­டு­வி­டா­மல் இருக்க பொது­மக்­க­ளுக்­கான தமிழ் நிகழ்ச்சி­களில் பங்­கேற்­கும்­படி இவர் கேட்­டுக்­கொள்­கி­றார். இத்­த­கைய நிகழ்ச்­சி­யில் சிங்­கப்­பூர் தமி­ழர்­கள் எந்த அள­வுக்­குப் பங்­கேற்­கின்­ற­னர் என்­பது குறித்த ஆய்­வு­கள் தேவைப்­படு­கின்­றன என்­றும் அதன் அடிப்­படை­யில்­தான் சரி­யான தீர்­வு­கள் வகுக்­கப்­ப­ட­லாம் என்று கூறி­னார்.

அன்­றாட வாழ்க்­கை­யின் அம்­சங்­க­ளுக்­கும் இலக்­கி­யப் படைப்­பு ­க­ளின் கூறு­க­ளுக்­கும் இடை­யி­லான ஒற்­று­மை­களை அறி­மு­கப்­படுத்­தி­னால் இவர்­க­ளி­டத்­தில் ஆர்­வம் வள­ரும் என்று இவர் குறிப்­பிட்­டார். சங்­கக் கால பண்­ட­மாற்று முறை­யைப் பற்றி பொரு­ளி­யல் பாடம் பயி­லும் மாண­வர்­க­ளுக்கு எடுத்­துக்­கூறி அதன் வழி­யாக தமிழ் ஆர்­வத்­தைத் தூண்­ட­லாம் என்­கி­றார் கலை­வாணி.

போதிய மொழிப்­பு­லமை இல்லை எனக் கரு­தப்­ப­டு­வோரை ஒதுக்­கி­டா­மல் அவர்­களை ஈடு­ப­டுத்­தும் நிகழ்ச்­சி­கள் திட்­ட­மி­டப்­ப­ட­ வேண்­டும். அத்­து­டன் ஆர்­வ­லர்­கள் வழி­காட்­டி­க­ளாக முன்­வந்து பிற­ருக்கு உத­வ­லாம் என்று தெரி­வித்­தார்.

"மற்ற கலை­ஞர்­களை உரு வாக்குவதே நல்ல கலை­ஞ­ருக்கு அழகு. தேவை­யற்ற போட்­டித்­தன்மை, கலை­யின் வளர்ச்­சிக்கு முட்­டுக்­கட்­டை­யாக இருக்­கும். அதி­கக் கலை­ஞர்­கள் உரு­வா­னால் பன்­மு­கத்­தன்­மை­தான் வள­ரும்," என்­கி­றார் குமாரி கலை­வாணி.