பொழுது போவதற்கு புதுமை புதையல் வேட்டை

பொழுது போவதற்கு புதுமை புதையல் வேட்டை

2 mins read
077b7055-8b88-4a3f-b859-2566b969fdb6
-
multi-img1 of 2

புலாவ் உபி­னில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த ஒரு­வகை புதை­யலை (geocache) அரை மணி நேர­மா­கத் தேடிய பிறகு அதை நிலத்­த­டிக் குழாய் ஒன்­றில் கண்டு­பி­டித்­தது மிஹி­ருக்கு மறக்க முடி­யாத ஓர் அனு­ப­வம். எறும்­புக் கடி­க­ளோடு காலில் காயங்­கள் ஏற்­பட்­ட­போ­தும், 'ஜியோ­கே­ஷிங்' எனும் பொழு­து­போக்­கின் மேல் அவ­ருக்கு ஆர்­வம்­தான் கூடி­யது.

அவர் கண்­டெ­டுத்த 'ஜியோ­கேஷே'யில் இருந்த பதி­வுப் புத்­த­கத்­தில் தனது பெயரை எழு­தி­ய­போது அவ­ருக்­குள் இனம்­பு­ரி­யாத ஒரு மகிழ்ச்சி தோன்­றி­ய­தாக இவர் கூறுகிறார்.

இதே பொழு­து­போக்­கில் கடந்த ஓராண்­டாக இறங்­கி­யுள்ள மாண­வர் ஹரி­கேஷ், இப்­போ­தெல்­லாம் தன் நேரத்­தைப் போக்க, 'ஜியோ­கே­ஷிங்' செய­லி­வழி மறைக்­கப்­பட்ட ஜியோ­கே­ஷேக்­க­ளைத் தேடிச் செல்­வதை வழக்­க­மாகக் ­கொண்­டுள்­ளார்.

உல­கின் ஆகப் பெரிய புதை­யல் வேட்டை விளை­யாட்டு என அறி­யப்­படும் 'ஜியோ­கே­ஷிங்' பல­ரை­யும் ஈர்த்­து­வ­ரும் ஒரு பொழுது­போக்­கா­கி­விட்­டது. உல­கெங்­கி­லும் மொத்­தம் இரண்டு மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட 'ஜியோ­கேஷே', அதா­வது புதை­யல் பொருள்­கள் மறைத்­து­வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பொ­ழு­து­போக்­குக்­கென உரு­வாக்­கப்­பட்­டுள்ள ஜியோ­கே­ஷிங் செய­லி­களில் உள்ள 'ஜிபி­எஸ்' எனப்­படும் இடங்­காட்­டித் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்தி மறைத்து வைக்­கப்­பட்­டுள்ள பொருள்­க­ளைக் கண்­டு­பி­டிப்­பதே நோக்­க­மா­கும்.

வெவ்­வேறு வித­மான ஜியோ­கே­ஷேக்­களை ஒரு­வர் கண்­டெ­டுக்­க­லாம். சில­வற்­றில் பதி­வுப் புத்­த­கங்­கள் இருக்­கும். இதற்கு முன் அந்­தப் புதை­யல் பொரு­ளைக் கண்­டெ­டுத்­தோ­ரின் பெயர் அவற்­றில் குறிக்­கப்­பட்­டி­ருக்­கும்.

யூடி­யூப் மூல­மாக இப்­பொ­ழுது­போக்­கைப் பற்றி அறிந்­து­கொண்ட மிஹிர் கண்­டேக்­கர், ஈராண்­டுக்­கும் மேலாக இதில் ஈடு­பட்டு வரு­கி­றார். 2019ல் இந்­தி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்த மிஹிர், சிங்­கப்­பூ­ரின் புகழ்­பெற்ற சுற்­று­லாத் தலங்­க­ளைக் கண்டு ரசித்­தார். அதி­கம் அறி­யப்­ப­டாத பல இடங்­க­ளுக்கு இந்­தப் பொழு­து­போக்கு தன்னை அழைத்­துச் சென்­றுள்­ள­தாக தொழில்­நுட்­பத் துறை­யில் பணி­பு­ரி­யும் 27 வயது மிஹிர் கூறி­னார்.

இவ்­வி­ளை­யாட்­டின் மற்­றொரு பய­னா­ள­ரான 24 வயது தேசிய சேவை­யா­ளர் சாய் அவி­னாஷ், 'டிக்­டாக்' மூல­மாக இது குறித்து அறிந்­து­கொண்­டார். நோய்ப்­ப­ர­வல் காலத்­தில் பொழு­து­போக்­காக இதை மேற்­கொண்டு வந்­தார். ஆனால், வரை­ப­டத்­தில் காணப்­படும் கேஷேக்­க­ளைப் பல­முறை கண்­டு­பி­டிக்க முடி­யா­மல் போன நிலை­யும் தனக்கு ஏற்­பட்­ட­துண்டு.

"இந்­தப் பொழு­து­போக்­கில் ஈடு­பட அதிக பொறுமை தேவை. பல கேஷேக்­கள் தொலைந்து போயி­ருக்­க­லாம் அல்­லது தேடு­

வ­தற்­குச் சிர­ம­மாக இருக்­க­லாம்," என்கி­றார் இவர்.

கணி­னி­யும் மின்­னி­யல் விளை­யாட்­டு­களும் தனக்கு மன­நி­றை­வை­யும் ஓய்­வை­யும் தர­வில்லை என்­றார் 16 வயது மாண­வர் ஹரி­கேஷ். ஜியோ­கே­ஷிங் குறித்து கேள்­விப்­பட்ட இவர், உடனே அச்­செ­ய­லியை பதி­வி­றக்­கம் செய்­தார். தனது குடும்­பத்­தா­ரு­டன் அவ்­வப்­போது இதில் ஈடு­படும் இவர், சுவா­ர­சி­ய­மான வழி­யில் பொழு­தைக் கழிக்க முடி­வ­தாக தெரி­வித்­தார்.

செய்தி: ஆ. விஷ்ணு வர்தினி