பல்கலைக்கழக வாழ்க்கைக்கு இளையர்களைத் தயார்ப்படுத்தும் 'சாதனா'

பல்கலைக்கழக வாழ்க்கைக்கு இளையர்களைத் தயார்ப்படுத்தும் 'சாதனா'

3 mins read
6e49643f-488f-4919-89b9-8f5b874a4a36
-

யுகேஷ் கண்­ணன்

தொடக்­கக்­ கல்­லூரி மாண­வர்­க­ளுக்­குத் துணைப்­பா­டம் வழங்­கும் நிகழ்ச்­சி­யாக சில ஆண்­டு

­க­ளுக்கு முன்பு வரை இருந்த 'சாதனா', தற்­போது பல்­க­லைக்­க­ழ­கம் செல்­ல­வி­ருக்­கும் மாண­வர்­க­ளுக்­குத் தேவை­யான தக­வல்­களை வழங்­கும் சிறப்பு நிகழ்ச்­சி­யாக உரு­மா­றி­யுள்­ளது.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத் தமிழ் பேரவை, சிண்டா ஆகிய அமைப்­பு­க­ளின் ஏற்­பாட்­டில் ஆண்­டு­தோ­றும் நடை­பெ­றும் இந்­நி­கழ்ச்சி, இம்­முறை கடந்த மாதம் 11ஆம், 12ஆம் தேதி­களில் கிட்­டத்­தட்ட 40 பங்­கேற்­பா­ளர்­

க­ளு­டன் நடை­பெற்­றது.

தொடக்­கக்­கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு மட்­டு­மல்­லா­மல் மேலும் பல மாண­வர்­க­ளுக்கு உத­வும் நோக்­கு­டன் இந்­நி­கழ்ச்சி மறு­சீ­ர­மைக்­கப்­பட்­ட­தாக பேர­வை­யின் துணைத் தலைவி, குமாரி பால­மு­ரு­கன் தீபிகா, 21, தெரி­வித்­தார்.

நிகழ்ச்­சி­யின் முதல் நாளன்று பங்­கேற்­பா­ளர்­க­ளுக்கு ஒரு­வரை பற்றி ஒருவர் மேலும் தெரிந்­து­கொள்ள உத­வும் விளை­யாட்­டு­களும் உரை­யா­டல் அங்­கங்­களும் நடை­பெற்­றன. அதோடு, பல்­க­லைக்­க­ழக வாழ்க்­கைச் சூழல், தங்­கு­மி­டங்­கள் போன்ற அம்­சங்­க­ளைப் பற்­றிய படைப்­பு­க­ளை­யும் வந்­தி­ருந்த மாண­வர்­கள் கண்டு தக­வல் அறிந்­த­னர்.

இரண்­டாம் நாளன்று இயந்­தி­ரப் பொறி­யி­யல், உள­வி­யல், மருத்­து­வம், சட்­டம் போன்ற பல­த­ரப்­பட்ட பல்­க­லைக்­க­ழக பாடங்­க­ளைப் பற்றி தற்­போ­தைய தமிழ் பேரவை உறுப்­பி­னர்­களும் முன்­னாள் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களும் பங்­கேற்­பா­ளர்­க­ளு­டன் பகிர்ந்து கொண்­ட­னர்.

நிகழ்ச்­சி­யின் பங்­கேற்­பா­ளர்­

க­ளுள் ஒரு­வ­ரான 16 வயது கனிகா, இந்­நி­கழ்ச்­சிக்கு முன்பு பல்­க­லைக்­க­ழக வாழ்க்கை, அங்கு வழங்­கப்­படும் பாடங்­கள், அவற்­றுக்­குத் தகு­தி­பெ­றத் தான் பெற வேண்­டிய மதிப்­பெண்­கள், போன்ற கூறு­க­ளைப் பற்றி பெரி­தும் அறிந்­தி­ருக்­க­வில்லை என்­றும் இந்­நி­கழ்ச்சி அவ­ருக்­குத் தேவை­யான தக­வல்­களை விவ­ர­மா­கத் தெரி­வித்­த­தென்­றும் கூறி­னார்.

மற்­றொரு பங்­கேற்­பா­ள­ரான குமாரி பூஜா­ஸ்ரீ, பல்­க­லைக்­க­ழக விண்­ணப்ப முறை­யைப் பற்றி இந்­நி­கழ்வு தெளி­வாக எடுத்­து­ரைத்­தது என்­றும் பகிர்ந்­து­கொண்­டார். தற்­போது ஈசூன் இன்­னோவா தொடக்­கக் கல்­லூ­ரி­யில் படித்து வரும் இவர், தன் நண்­பர்­க­ளை­யும் அடுத்த ஆண்டு இந்­நி­கழ்ச்­சி­யில் சேர ஊக்­கு­விப்­பா­ரெ­னக் கூறி­னார். தங்­க­ளது எதிர்­கா­லத் திட்­டங்­களை முன்பே வகுக்க உத­வும் இம்­மு­யற்சி உன்­ன­த­மா­ன­தென்­றும் இவர் கருதுகிறார். நிகழ்ச்­சி­யின் ஏற்­பாட்­டுக் குழுத் தலைவி குமாரி மஜ்­வின் சுமையா, "பங்­கேற்­பா­ளர்­கள் இரண்டு நாள்­களும் துடிப்­பு­டன் பங்­கேற்று, இறு­தி­யில் புதி­தா­கப் பல­வற்றை அறிந்­து­கொண்­ட­தா­கக் கூறி­யது

­ம­கிழ்ச்சி அளித்­தது," என்கி­றார். அவ­ரது குழு­விற்­குப் பக்­க­ப­ல­மாக இருந்த சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழக தமிழ் பேர­வை­யின் தலை­வர்­க­ளுக்­கும் அவர் தனது நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொண்­டார்.

ஏற்­பாட்­டுக் குழு­வைச் சேர்ந்த கலி­ய­மூர்த்தி ரஞ்­சித், பழ­னி­யப்­பன் ஸ்ரீராம், சீனி­வா­ச­ரா­க­வன் பிர­னீத் ஆகி­யோர் இந்­நி­கழ்ச்­சியை ஏற்­பாடு செய்­த­தன் வழி, இது­வரை பல்­க­லைக்­க­ழக வாழ்­வைப் பற்றி தங்­க­ளுக்கே தெரி­யா­த­வற்றை அறிந்து அவற்றை மாண­வர்­க­ளி­டம் கொண்டு சேர்த்­தது புதிய அனு­ப­வ­மாக அமைந்­த­தெ­னக் கூறி­னர்.

குழு­வின் மற்ற உறுப்­பி­னர்­க­ளான மது­லிகா பழ­னி­வேலு, மெலிண்டா ஜோஷல், ஜெயச்­சந்­தி­ரன் தீப்­ஸ்ரீ ஆகி­யோர் மாண­வர்­க­ளுக்கு முழு­நே­ர­மும் தக­வல்­களை மட்­டும் வழங்கி அவர்­க­ளைச் சோர்­வ­டை­யச் செய்­யா­மல், அவர்­க­ளைத் துடிப்­பாக வைத்­தி­ருக்க ஏற்­பாடு செய்­யப்­பட்ட விளை­யாட்­டு­கள் பங்­கேற்­பா­ளர்­கள் மத்­தி­யில் நல்ல வர­வேற்­பைப் பெற்­ற­தாக பகிர்ந்­து­கொண்­ட­னர். மார்ச் மாதம் நடக்­க­வி­ருந்த இந்­நி­கழ்ச்சி சில எதிர்­பா­ராத கார­ணங்­க­ளால் முன்­னுக்கு தள்­ளப்­பட்­ட­போ­தும் வெற்­றி­க­ர­மாக நிகழ்ச்­சியை நடத்தி முடித்­ததை எண்ணி அவர்­கள் பெரு­மி­தம் கொண்­ட­னர்.

குமாரி தீபிகா ஏற்­பாட்டு குழு­விற்­குத் தனது பாராட்­டு­க­ளைத் தெரி­வித்­த­தோடு சிண்­டா­வுக்­கும் அதன் இளை­யர் பிரி­வுக்­கும் தனது நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொண்­டார். அவர்­க­ளது ஆத­ரவு இல்­லா­மல் இந்­நி­கழ்ச்சி சாத்­தி­ய­மா­கி­யி­ருக்­காது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.