தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இசையமைப்பாளர் டி.இமானின் பாராட்டை வென்ற நவீன்

3 mins read
b8bb3ae8-7c61-42a3-9c98-232bdb9b9653
-

மாதங்கி இளங்­கோ­வன்

தந்­தை­யின் ஊக்­கு­விப்­பில் மிகச் சிறு வய­தில் இசை உல­குக்கு அறி­மு­க­மா­னார் நவீன் குண­சேகரன். சிங்­கப்­பூர் இந்­திய நுண்­க­லைக் கழ­கத்­தில் கர்­நா­டக இசை வகுப்­பு­க­ளுக்­கும் வய­லின் வகுப்­பு­க­ளுக்­கும் தந்­தை­தான் தன்னை அழைத்­துச் சென்­றார். வகுப்­பு­கள் முடி­யும்­வரை அவர் காத்­தி­ருப்­பார் என நினை­வு­கூர்ந்­தார், நவீன் 25. தனது முதல் 'கீபோர்ட்' கரு­வி­யைக்­கூட தந்­தை­தான் வாங்­கித் தந்­ததாக அவர் குறிப்பிட்டார்.

இவ்­வாறு அனைத்­தி­லும் பக்க­ப­ல­மாக இருந்த அந்தத் தந்தை, 2018ஆம் ஆண்­டில் புற்று­நோ­யால் உயி­ரி­ழந்­தார். அவர் இல்­லா­த­போதி­லும் அவ­ருக்­குப் பெருமை சேர்க்க வேண்­டும் என்ற குறிக்­கோ­ளு­டன் நவீன் அனைத்­தி­லும் சிறந்து விளங்க முயன்று வரு­கிறார்.

அதே எண்­ணத்­து­டன்­ வசந்­தம் ஸ்டார் பாட்­டுத் திறன் போட்டி­யில் அவர் அண்­மை­யில் களம் இறங்­கி­னார்.

இப்­போட்­டி­யின் விண்­ணப்பக் காலம் முடி­யும் தறு­வா­யில் அவ­ரது தாயா­ரின் உந்­து­த­லா­லும் சகோ­த­ரர்­கள், நண்­பர்­க­ளின் ஆத­ர­வா­லும் 'இளங்­காத்து வீசுதே' என்­னும் பாடலை யூடி­யூப் தளத்­தில் பதி­வேற்­றம் செய்து போட்­டிக்­காக சமர்ப்­பித்­தார். அதன்­வழி அவர் போட்­டி­யின் தகு­திச் சுற்­றுக்­குத் தேர்வு பெற்று இறு­திச் சுற்று வரை சென்று வசந்­தம் ஸ்டார் என வாகை சூடி­னார். மொத்­தம் $20,000 ரொக்­கத்­தை­யும் அவர் தட்­டிச் சென்­றார்.

நவீன் இயல்­பா­கவே கூச்ச சுபா­வ­மு­டை­ய­வர். அப்­ப­டிப்­பட்­ட­வருக்கு வசந்­தம் ஸ்டார் போட்டி தன்­னம்­பிக்கை ஊட்­டி­ய­தோடு ஒரு நிகழ்ச்சி படைக்­கப்­ப­டு­வ­தற்­குப் பின்­ன­ணி­யில் நடை­பெ­றும் வேலை­கள் என்னென்ன என்று கற்­றுக்­கொள்­ளும் வாய்ப்­பும் கிட்­டி­யது. அதோடு நேர­டி­யாக வாசித்த இசைக்­கு­ழு­வு­டன் எவ்­வாறு ஒருங்­கி­ணைந்து பாடு­வது, ஓர் அரங்­கத்­தில் ஒலி­பெ­ருக்­கியை எவ்­வாறு குர­லுக்­குச் சாத­க­மாக பயன்­ப­டுத்­து­வது என்­றும் கற்­றுக்­கொண்­டார்.

பலவித இசைப் பின்னணியைக் கொண்ட பாடல்­க­ளை­யும் பாட இம்­மேடை அவ­ருக்கு வாய்ப்­

ப­ளித்­தது. தமது இன்ஸ்­ட­கிராம் பக்­கத்­தில் சில ஆண்­டு­க­ளா­கவே மெல்லிசைப் பாடல்­க­ளைப் பாடி பதி­வேற்­றம் செய்­து­வந்த நவீன், இப்­போட்­டிக்கு வந்த பின்­னர்­தான் குத்­துப் பாடல்­களும் தம் குர­லுக்­குப் பொருத்­த­மாக இருப்பதை உணர்ந்­தார்.

நவீன், இறு­திச் சுற்­றில் 'காத­லன்' திரைப்­ப­டத்­தில் இடம்­பெற்ற 'என்­ன­வளே' பாடலை முதல் அங்­கத்­தில் பாடி­னார். பின்­னர், அனைத்துப் போட்­டி­யா­ளர்­களும் 'மூங்­கில் தோட்­டம்' என்ற பாட­லை­யும் இசை­ய­மைப்­பா­ளர் டி.இமா­னின் இசை­ய­மைப்­பில் புதி­ய­தொரு பாட­லை­யும் பாடி­னார்­கள். நவீ­னின் குரல் வளத்­தை­யும் அவ­ரது பாடல் திற­னை­யும் கேட்டு பிரமித்­துப் போன டி.இமான், தமது பாடல் ஒன்றில் பாட நவீ­னுக்­கு வாய்ப்பளிக்­கப் போவ­தாக அறி­வித்­தார்.

வசந்­தம் ஸ்டார் போட்­டி­யால் நவீன் நீண்­ட­கா­ல­மாக காணாத தமது நண்­பர்­களும் தமக்கு ஆத­ர­வ­ளிக்க வந்­தது மனதை நெகிழ வைத்­த­தா­கக் குறிப்­பிட்­டார். குடும்­பத்­தி­னர், நண்­பர்­கள் ஒன்­றாக அமர்ந்து ஆர­வா­ரம் செய்­தது தாம் மேடை­யில் இன்­னும் நன்­றா­கப் பாட ஊக்­கு­வித்­தது என்கி­றார். தமக்­குத் தெரி­யாத பல­ரும் அவ­ரு­டைய திறனை மெச்­சி­ய­போது நவீ­னுக்கு அள­வில்லா ஆனந்­தம்­தான்.

"இசைத் துறை­யில் வளர்­வதற்கு எனக்கு நான்கு பேரைத் தெரிய வேண்­டும். அதே­போல நான்கு பேருக்கு என்­னை­யும் தெரிய வேண்­டும். அவ்­வி­தத்­தில், வசந்­தம் ஸ்டார் மேடை எனக்கு ஷபீர், ரஃபி, விக்­னேஸ்­வரி போன்ற உள்­ளூர் கலை­ஞர்­களை அறி­மு­கம் செய்­துள்­ளது. இப்­போட்டி­யால் மற்ற சில புதிய வாய்ப்­பு­க­ளை­யும் பெற­லாம் என நம்­பு­கி­றேன்," என்­றார்.

சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­கலைக்­க­ழ­கத்­தில் உள­வி­யல் துறையில் பட்­டக் ­கல்வி பயிலும் நவீன், தனது பட்­டக் கல்வி, பட்­ட­யக் கல்வி, வசந்­தம் ஸ்டார் பய­ணம் எனப் பல­வற்­றை­யும் ஒரே கால­கட்­டத்­தில் சமா­ளித்து வந்­துள்­ளார். அனைத்­தை­யும் சமா­ளிப்­பது சவா­லாக இருந்­தாலும் அவர் தொடர்ந்து விடா­முயற்­சி­யு­டன் செயல்­பட்­டார்.

இசை­ய­மைப்­பா­ளர் யுவன் சங்­கர் ராஜா­வின் தீவிர ரசி­க­ரான நவீன், பிற்­கா­லத்­தில் தமது சொந்த பாடல்­க­ளுக்கு இசை­யமைத்­தும் பாட விரும்­பு­கி­றார். தமி­ழில் மட்­டு­மல்­லா­மல் ஆங்­கிலத்­தி­லும் பாடல்­வ­ரி­கள் எழு­தும் ஆவ­லு­டன் உள்­ளார். அதற்காக பாடல் எழு­தும் துறை­யில் பட்­ட­யக் கல்வி மேற்­கொண்டு வரு­கி­றார்.

நவீன் தன் வெற்­றிக்கு உறு­து­ணை­யாக உள்ள குடும்­பத்­தாருக்­கும் நண்­பர்­க­ளுக்­கும் என்­றென்­றும் தான் கட­மைப்­பட்­டிருப்­ப­தா­கக் கூறி, அவர்­க­ளுக்­குத் தனது மன­மார்ந்த நன்­றி­யை­யும் தெரி­வித்­தார்.