தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெற்றிக்கு இட்டுச்செல்லும் பாதை தூரமில்லை, பாரமில்லை

6 mins read
f2356d92-3810-49f9-993c-0c69afc51c31
-
multi-img1 of 3

தவறான எண்ணம் மாறவேண்டும்

தாதி­மைத் துறை­யில் ஆண்­கள் சேர்­வது வழக்­கத்­திற்கு மாறா­னது எனச் சிலர் கரு­தி­னா­லும் 23 வயது ராஜேந்­தி­ரன் ராஜேஷ், அத்­து­றை­யில் உள்ள ஆர்­வத்­தி­னால் நன்­யாங் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் தாதி­மைத் துறை தொடர்­பான பட்­ட­யக்­கல்­வியை மேற்­கொண்­டார்.

தான் தேசிய சேவை ஆற்­றும் காலத்­தில் ராணுவ மருத்­து­வக் குழு­வில் இருந்த அனு­ப­வம் தாதி­மைத் துறைக்­குள் நுழைய

ஊக்­கு­விப்­பாக இருந்­த­தென ராஜேஷ் குறிப்­பிட்­டார்.

"தேசிய சேவை­யில் ஒழுக்­க­மும் கட்­டுப்­பா­டும் முக்­கி­யம் என வலி­யு­றுத்­தப்­பட்­டா­லும் எனக்­குத் தரப்­பட்ட பொறுப்­பின் மூலம் மனி­தா­பி­மான உணர்வை பிற­ரி­டையே ஏற்­ப­டுத்த முடிந்­தது," என்று கூறி­னார் இவர்.

தாதி­யா­கப் பணி­பு­ரி­வது தனது வாழ்க்­கைக்­குப் பொருள் தரு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

"நமக்­கான துறை­யை­யும் வேலை­யை­யும் தீர்­மா­னிப்­ப­தாக நமது பாலி­னம் ஒரு­பொ­ழு­தும் இருந்­து­வி­டக்­கூ­டாது. தாதி­மைத் துறை­யில் பெண்­கள் அதி­கம் சேர்­வர் என்று பல­ரி­டையே நில­வும் கருத்து, நான் எனது இலக்­கி­லி­ருந்து பின்­வாங்க வைக்­க­வில்லை," என்று ராஜேஷ் கூறி­னார்.

கல்­வி­யில் சிறந்து விளங்­கா­தோர்­தான் தாதி­மைத் துறை­யில் இணை­வர் என்ற தவ­றான கண்­ணோட்­ட­மும் உண்டு என்று தெரிவித்தார் அவர்.

ராஜேஷ் இவ்­வாண்டு நீ ஆன் கொங்சி விருது மட்­டு­மல்­லாது டே எங் சூன் சுகா­தார, சமூக அறி­வி­யல் விரு­தை­யும் வென்­றுள்­ளார். அது­மட்­டு­மல்­லா­மல், சுகா­தார அமைச்சு இவ­ருக்கு ஒருங்­கி­ணைந்த தாதிமை உப­கா­ரச் சம்­பள விரு­தை­யும் வழங்­கி­யுள்­ளது.

நிச்­ச­ய­மற்ற கொவிட்-19 கால­கட்­டத்­தி­லும் அவ­ரது முடி­வையோ இலக்­கையோ மாற்­றிக்­கொள்­ளா­மல் ஒரு தாதி­யாக சமூ­கத்­தில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்­டும் என்ற உறு­தி­யு­டன் ­பட்­ட­யக்­கல்­வி­யில் சிறப்­புத் தேர்ச்சி பெற்­றுள்­ளார் ராஜேஷ்.

தாய்க்கு அர்ப்பணம்

தெமா­செக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் பயின்ற சதீஷ் குமார் கண்­ணன், 20, அதி­க­பட்­ச­மாக நான்கு புள்­ளி­கள் பெற்­றுள்­ளார்.

சதீ­ஷுக்கு 15 வயது இருக்­கும்­போது அவ­ரின் பெற்­றோர் பிரிந்­த­தால் அவர் தன் படிப்­பு­டன் வீட்­டுப் பொறுப்­பு­க­ளை­யும் ஏற்­றுக்­கொண்­டார்.

வீட்­டுச் சூழ­லைப் படிப்­பி

­லி­ருந்து பிரித்­துப் பார்க்­கும்­படி அவ­ரு­டைய தாயார் அடிக்­கடி வலி­யு­றுத்­து­வ­துண்டு.

அது­மட்­டு­மல்­லா­மல், எவ்­வித கவ­னச்­சி­த­ற­லும் இல்­லாத ஒரு வீட்­டுச் சூழலை சதீ­ஷுக்கு அமைத்­துக் கொடுத்­தார் அவ­ரின் தாயார்.

தனது உயர்­நி­லைப் பள்­ளி­யில் வழக்­க­நி­லைத் தேர்வு எழு­திய மாண­வர்­களில் உச்­சத் தேர்ச்சி பெற்ற மாண­வ­ராக அவர் விளங்­கி­னார்.

பல­து­றைத் தொழிற்­கல்­லூரி அடிப்­ப­டைக் கல்­வித் திட்­டத்­தின் கீழ் பொறி­யி­யல் பட்­ட­யக்­கல்­வியை மேற்­கொண்­டார் இவர்.

இத­னை­ய­டுத்து எந்­தி­ர­வி­யல் துறை­யில் சாதிக்க வேண்­டும் என்ற இலக்­கைக் கொண்­டுள்­ளார் சதீஷ். இவர் பல்­வேறு பொதுச் சேவை பணி­க­ளி­லும் ஈடு­பட்­டுள்­ளார். தெம்­ப­னிஸ் நார்த் குழுத்­தொ­கு­தி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சந்­திப்பு அங்­கத்­தில் பங்­கேற்று வரு­வ­தோடு 'ஹாவ் ரென் ஹாவ் ஷி' என்ற லாப நோக்­க­மற்ற அமைப்­பு­டன் இணைந்து தொண்­டூ­ழிய சேவை புரிந்து வரு­கி­றார் இவர்.

"சிறு­வ­ய­தில் எங்­க­ளது மின் கட்­ட­ணங்­க­ளைச் செலுத்­து­வ­தற்கு எங்­கள் குழுத்­தொ­கு­தி­யின் உதவி இருந்­த­தாக என் தாயார் கூறி­யுள்­ளார். அதே­போல் இன்று என்­னால் பிற­ருக்கு உதவ முடி­வது பெரும் மன­நி­றைவை அளிக்­கிறது," என்று சதீஷ் கூறி­னார்.

அவர் வென்­றுள்ள லீ குவான் யூ விரு­தைத் தன்­னு­டைய அம்­மா­வுக்கு அர்ப்­ப­ணிப்பதாகத் தெரிவித்தார் சதீஷ்.

சொந்த நிறு­வ­னத்தை ஆரம்­பித்­தார்

'ஈகோ­நே­ஷன்' என்ற நிறு­வ­னத்தை நிறு­விய சண்­மு­க­வேல் சந்­தியா, 19, நீடித்த நிலைத்­தன்மை பற்­றிய விழிப்­பு­ணர்வை இளை­யர்­க­ளி­டையே ஏற்­ப­டுத்­துவதே இந்­நி­று­வ­னத்­தின் முதன்மை நோக்­க­மா­கக் கொண்­டுள்­ளார்.

உரம் தயா­ரிக்­கும் பட்­ட­றை­ ஏற்­பாடு செய்து, அதில் உரம் தயா­ரிக்­கும் மூன்று அம்­சத் தொட்­டியை அறி­மு­கப்­ப­டுத்­தி­னார் இவர்.

சொந்த மறு­சீ­ர­மைப்பு நிறு­வ­னத்தை நிறுவி மறு­சீ­ர­மைப்பு ஒப்­பந்­த­தா­ர­ராக இருக்­கி­றார் சந்­தி­யா­வின் தந்தை.

குடும்ப வர்த்­த­க­மாக விளங்­கும் இந்த மறு­சீ­ர­மைப்பு நிறு­வ­னத்­தி­லும் நீடித்த நிலைத்­தன்­மையை நிலை­நாட்­டும் வகை­யில் புதிய திட்­டங்­க­ளைச் செயல்

­ப­டுத்த விரும்­பு­கி­றார் சந்­தியா.

சந்­தி­யா­வின் தந்தை சந்­தி­யா­வின் கன­வு­க­ளுக்கு ஓர் உந்­து­

த­லாக இருந்­துள்­ளார்.

சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழிற் கல்­லூ­ரி­யில் கடல்­சார் வர்த்­த­கத் துறை­யில் பட்­ட­யக்­கல்­வியை மேற்­கொண்­டார் சந்­தியா.

கடல்­சார் துறையை உலக வர்த்­த­கத்­தின் முது­கெ­லும்­பா­கக் கரு­தும் சந்­தியா, இத்­து­றை­யைத் தேர்ந்­தெ­டுத்து இதில் மேன்­

மே­லும் சிறந்து விளங்­க­வேண்­டும் என்ற ஆர்­வத்­தில் உள்­ளார்.

தந்­தை­யால் பிறந்த ஆர்­வம்

குறை­க­டத்­திப் பொறி­யா­ள­ராக பணி­பு­ரிந்த தன் அப்­பா­வி­னால் பொறி­யி­யல் துறை மீது மனோஜ் காயத்­தி­ரிக்கு, 20, ஆர்­வம் வந்­தது.

சிறு­வ­ய­தில் தந்தை கொண்டு­வ­ரும் மின்­சுற்­றுப்­ப­ல­கை­க­ளின் நுட்­ப­மான பகு­தி­களை மிகச் சுல­ப­மா­கக் கையாண்ட நாள்­களை நினை­வு­கூர்ந்­தார் காயத்­திரி. அன்­றி­லி­ருந்து பொறி­யி­யல் துறை மீது கொண்ட ஆர்­வத்­தி­னால் சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் பொறி­யி­ய­லு­டன் வர்த்­த­கம் சார்ந்த பட்­ட­யக்­கல்­வியை மேற்­கொண்­டார் இவர்.

சிங்­கப்­பூர் இன்­டோர் ஃபார்ம் பிரை­வெட் லிமி­டட் நிறு­வ­னத்­தில் இவ­ரது 22 வார வேலைப் பயிற்­சி­யின்­போது நகர்ப்­பு­றப் பண்­ணை­கள் சார்ந்த தீர்­வு­கள் தொடர்­பான ஒப்­ப­டைப்­பில் ஈடு­பட்­டார்.

இந்த ஒப்­ப­டைப்­பின் ஓர் அங்­க­மாக இவர், தானி­யக்க மண்னில்லாத வேளாண்மை அல­மா­ரி ஒன்றை வடி­வ­மைத்­தார்.

கல்வி சார்ந்­த­வற்­றில் மட்­டு­மல்­லாது இசை, பர­த­நாட்­டி­யம் ஆகி­ய­வற்­றி­லும் சிறந்து விளங்­கும் காயத்­தி­ரிக்கு லீ குவான் யூ விருது வழங்­கப்­பட்­டுள்­ளது.

வானுயரப் பறக்கும் ஆசை நிறைவேறியது

சிறு­வ­ய­தி­லி­ருந்து உயர எது பறந்­தா­லும் அதைப் பார்த்து வியந்த தண்­டா­யு­த­பாணி கிரித்­திக் கும­ரன், 20, இன்று விமா­னத்­து­றை­யில் சாதிக்­கும் ஆர்­வத்­தோடு உள்­ளார்.

சிங்­கப்­பூர் தொழிற்­கல்­லூ­ரி­யில் வானூர்­திப் பொறி­யி­யல் துறை­யில் பட்­ட­யக்­கல்வி மேற்­கொண்­டார் கிரித்­திக்.

விமா­னங்­கள் மீதான தனது ஈடு­பாட்­டால் போர் தொடர்­பான திரைப்­ப­டங்­களை எந்­நே­ர­மும் ரசித்­துப் பார்ப்­பார் இவர்.

உயர்­நி­லைப் பள்­ளி­யில் பயி­லும் கால­கட்­டத்­தில் பல்­வேறு விமா­னம் சார்ந்த போட்­டி­களில் பங்­கு­பெ­றும் வாய்ப்பை கிரித்­திக் பெற்­றார்.

சிங்­கப்­பூர் ஏரோ எஞ்­சின் சர்­வி­சஸ் பிரை­வெட் லிமி­டெட் நிறு­வ­னத்­து­டன் அமைந்த இவ­ரது வேலைப்­ப­யிற்­சி­க­ளின் போது ஏஸ்­டா­ரின் மேம்­பட்ட மறு­வுற்­பத்தி, தொழில்­நுட்ப மையத்­து­டன் இணைந்து பழுது பார்த்­தல், பரா­ம­ரிப்பு, ஆய்வு செயல்­மு­றை­க­ளைத் தானி­யக்­க­மாக்­கு­வ­தில் ஈடு­பட்­டார் கிரித்­திக்.

இந்த அனு­ப­வத்­தால் தனது விருப்­பு­வெ­றுப்­பு­க­ளைத் தெரிந்து­கொண்­ட­தோடு தன் வேலைத்­துறை சார்ந்த இலக்­கு­களை இவ­ரால் நிர்­ண­யிக்­க­வும் முடிந்­தது.

எதிர்­கா­லத்­தில் பழுது மேம்­பாட்டு பொறி­யா­ள­ரா­கப் பணி

­பு­ரிய விரும்­பு­கி­றார் கிரித்­திக்.

பொறுப்­பு­க­ளைக் கைவி­டாத சாத­னைப் பய­ணம்

ஓர் உண­வங்­கா­டிக் கடை­யின் உரி­மை­யா­ள­ராக இருக்­கும் தன் தந்­தைக்கு உத­வு­வ­தோடு சி. நிஷா, 23, தன் இலக்­கி­லி­ருந்து தடம் மாற­வில்லை.

ரிபப்­ளிக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் உயிர் மருத்­துவ அறி­வி­யல் துறை­யில் பட்­ட­யக்­கல்வி மேற்­கொண்­டார் நிஷா.

சமூ­கத்­தில் மாற்­றத்தை ஏற்

­ப­டுத்த வேண்­டும் என்று நினைக்­கும் இவ­ருக்கு ஆராய்ச்­சித் துறை­யில் அதீத ஆர்­வம்.

மேல்­நி­லைத் தேர்­வுக்­குப் பின்­னர் தனக்கு அறி­வி­ய­லில் ஆர்­வம் உண்டு என்று தெரிந்­தா­லும் குறிப்­பாக எந்த வகை அறி­வி­யல் அம்­சம் என்று அவ­ருக்­குத் தெரி­ய­வில்லை.

சில காலம் மருந்­தக உத­வி­யா­ள­ரா­கப் பணி­பு­ரிந்த நிஷா­வுக்­குப் புற்­று­நோய் மருந்­து­க­ளைப் பற்றி மேலும் தெரிந்­து­கொள்ள வேண்­டும் என்ற ஆர்­வம் வந்­தது.

"புற்­று­நோய் பற்­றிய ஆராய்ச்­சி­யில் இறங்கி புற்­று­நோ­யால் அவ­தி­யு­று­வோ­ரின் வாழ்க்­கை­யில் மாற்­றத்தை என்­னால் கொண்­டு­வர முடி­யும் என நம்­பு­கி­றேன்," என்று நிஷா கூறி­னார்.

எது நேர்ந்தாலும் இலக்கு மாறாது

தனது முழங்­கா­லில் கடு­மை­யான தசை­நார் காயம் ஏற்­பட்டு அதற்­கான சிகிச்­சை­க­ளுக்­குச் சென்று­வந்­த­போ­தும் முக­மது ஃபஸ்­லூர் ரஹ்­மான், 19, பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் முழு பங்­கேற்­பு­டன் ஈடு­பட்­டார்.

ஆரம்­பத்­தில் கத்­தோ­லிக்­கத் தொடக்­கக்­கல்­லூ­ரி­யில் பயின்ற இவர், கிட்­டத்­தட்ட மூன்று மாதங்­களில் மேல்­நி­லைத் தேர்வு பாடங்­கள் பயில்­வ­தில் தனக்கு அவ்­வ­ள­வாக ஆர்­வ­மில்லை என்­பதை உணர்ந்­தார்.

தெமா­செக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யின் சட்­டம் மற்­றும் நிர்­வா­கப் பட்­ட­யக்­கல்­வியை மேற்­கொண்­டார் ஃபஸ்­லூர்.

சட்­டம் மற்­றும் நிர்­வா­கம் தொடர்­பான ஆர்­வ­லர் குழு­வின் துணைத் தலை­வ­ராக இருந்த ஓராண்­டில் அக்­குழு கிட்­டத்­தட்ட 13 நிகழ்ச்­சி­க­ளுக்கு ஏற்­பாடு செய்­தது.

சட்­டத்­து­றை­யில் சிறந்து விளங்­க வேண்­டும் என விரும்­பு­ம் இவர், சர்ச்­சை­க­ளுக்­குத் தீர்வு காணு­தல் அல்­லது குற்­ற­வி­யல் வழக்­கு­களில் கவ­னம் செலுத்த விரும்புகிறார்.